நாமக்கல்லில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்தும், அதனைத் திரும்பப் பெறக் கோரியும் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சித் தொண்டர்களை உற்சாகப்படுத்த நடன கலைஞர்களின் குத்தாட்டம் நடைபெற்றது.
தொடக்கத்தில் சாலையில் நடனம் நடைபெற்ற நிலையில், கூட்டம் அதிகமாக வரத் தொடங்கியதும், நடனக் கலைஞர்கள் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லாரியின் மீது ஏறி குத்தாட்டம் ஆடினர். போராட்டத்திற்கு வந்தவர்கள் குத்தாட்டத்தை ரசித்தவாறே அதனை செல்போனிலும் படம் பிடித்துச் சென்றனர்.
இதையும் படிங்க: ’முதலமைச்சருக்கு சொல் புத்தியும் இல்லை; சுய புத்தியும் இல்லை’