ETV Bharat / state

கந்துவட்டி கொடுமை - இளைஞர் தற்கொலை!

author img

By

Published : Jul 3, 2022, 6:40 PM IST

கந்து வட்டி கொடுமை காரணமாக இளைஞர் தற்கொலை
கந்து வட்டி கொடுமை காரணமாக இளைஞர் தற்கொலை

கள்ளக்குறிச்சியில் கந்து வட்டி கொடுமை காரணமாக இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி அண்ணாநகரைச் சேர்ந்தவர் தினேஷ்குமார் (21). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக
பணிபுரிந்து வருகிறார். தனக்குத்தெரிந்த நபரிடம் அவர் கந்து வட்டிக்குப் பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. மேலும், வாங்கிய கடனுக்கு வட்டியும், அசலும் சேர்த்து அதிகமாக கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடன் கொடுத்த நபர் மேலும் வட்டி பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இதனால் மனமுடைந்த தினேஷ்குமார் தனது பிரச்னையை வீடியோவாகப் பதிவு செய்து தற்கொலை செய்து கொண்டார்.

சம்பவம் குறித்து தகவலறிந்த கள்ளக்குறிச்சி காவல் துறையினர் தினேஷ்குமார் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கந்து வட்டி கொடுமை காரணமாக இளைஞர் தற்கொலை

இதையும் படிங்க: கேஸ் ஸ்டவ் முதல் குக்கர் வரை... வீட்டிற்குத் தேவையான பொருட்களைத் திருடிய திருடர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.