ETV Bharat / state

சிறுமியை காதலித்து, கடத்தி திருமணம் செய்தவர் கைது!

author img

By

Published : Mar 8, 2021, 2:18 PM IST

சிறுமியை காதலித்து, கடத்தி திருமணம் செய்த இளைஞர் கைது!
சிறுமியை காதலித்து, கடத்தி திருமணம் செய்த இளைஞர் கைது!

மயிலாடுதுறை: சிறுமியை காதலித்து, கடத்தி திருமணம் செய்த இளைஞர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீனுவாசபுரம் பொன்னிநகரை சேர்ந்தவர் சின்னா என்ற பாலச்சந்திரன் (30). திருப்பூரில் தனியார் நிறுவனமொன்றில் வேலை செய்து வருகிறார். கரோனா ஊரடங்கு சமயத்தில் சொந்த ஊருக்கு வந்திருக்கிறார்.

அப்போது மயிலாடுதுறையில் உள்ள பள்ளி ஒன்றில் 12ஆம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமியிடம் பழக்கம் ஏற்பட்டு செல்போனில் பேசி வந்துள்ளார். இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் சிறுமியை கண்டித்துள்ளனர்.

இந்நிலையில், சென்ற ஆண்டு நவம்பர் மாதம் 21ஆம் தேதி அதிகாலை சிறுமியை பாலச்சந்திரன் கடத்தி சென்றுவிட்டதாக, சிறுமியின் பெற்றோர்கள் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சிறுமியுடன் தலைமறைவாக இருந்த பாலச்சந்திரனை கைது செய்தனர். மேற்கொண்டு காவல் துறையினர் நடத்திய விசாரணையில், பாலச்சந்திரன் சிறுமியை திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த காவல் துறையினர் குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பாலச்சந்திரனை சிறையிலடைத்தனர்.

இதையும் படிங்க : ராயபுரத்தில் தேர்தல் பரப்புரையை தொடங்கினார் அமைச்சர் ஜெயக்குமார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.