ETV Bharat / state

மனைவியை கட்டையால் அடித்து கொன்ற கணவன்!

author img

By

Published : May 6, 2020, 12:58 PM IST

மனைவியை கட்டையால் அடித்து கொன்ற கணவன்!
மனைவியை கட்டையால் அடித்து கொன்ற கணவன்!

நாகை: செம்பனார்கோவில் அருகே தூய்மைப் பெண் பணியாளரை கட்டையால் அடித்து வாய்க்காலில் மூழ்கடித்து கொலை செய்த கணவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

நாகை மாவட்டம் செம்பனார்கோவில் காவல் சரகம்திற்குட்பட்ட கிள்ளியூர் கிராமப் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயக் கூலி தொழிலாளி விஜயகுமார் (42). இவரது மனைவி மாரியம்மாள் (38) கிள்ளியூர் ஊராட்சியில் தூய்மைப் பணியாளராக வேலை பார்த்துவருகிறார். இவர்களுக்கு விஜயராகவன் (17), விக்னேஷ் (12) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். மாரியம்மாளின் நடத்தையில் சந்தேகப்பட்டு விஜயகுமார் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று இரவு மாரியம்மாள் தனது உறவினர் ஒருவருக்கு குழந்தை பிறந்துள்ளதால் அவரைப் பார்ப்பதற்காக கணவரிடம் தகவல் சொல்லாமல் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இதையடுத்து இரவு முழுவதும் காத்திருந்த விஜயகுமார், காலையில் மனைவியைத் தேடிச் சென்றுள்ளார்.

அப்போது நடுவாய்க்கால் என்ற இடத்தில் எதிரே நடந்து வந்த தனது மனைவியை பார்த்த விஜயகுமார், ஆத்திரத்தில் கீழே கிடந்த மரக்கட்டையை கொண்டு மாரியம்மாளின் முகத்திலும், தாடையிலும் தாக்கியுள்ளார். இதில் மயங்கி விழுந்த அவரை அருகில் இருந்த வாய்க்கால் தண்ணீரில் அழுத்தி கொன்றுள்ளார்.

மனைவியை கட்டையால் அடித்து கொன்ற கணவன்!

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த மயிலாடுதுறை டிஎஸ்பி அண்ணாதுரை தலைமையிலான செம்பனார்கோவில் காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து விஜயகுமாரை கைது செய்தனர். தொடர்ந்து மாரியம்மாளின் உடலை கைப்பற்றி மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் பார்க்க: தெலங்கானாவில், மதுபானங்களின் விலை 16 விழுக்காடு அதிகரிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.