ETV Bharat / state

நாகூர் தர்காவை பரம்பரை டிரஸ்டிகளிடம் ஒப்படைத்த வக்ஃப் வாரியம்

author img

By

Published : Apr 13, 2022, 9:00 PM IST

சென்னை உயர் நீதி மன்றத்தின் உத்தரவின்படி, நாகூர் ஆண்டவர் தர்காவின் நிர்வாகத்தை, தமிழ்நாடு வக்ஃப் வாரிய முதன்மை நிர்வாக அலுவலர் வசீர் அஹ்மத், 11 பேர் அடங்கிய நாகூர் பரம்பரை டிரஸ்டிகளிடம் முறைப்படி ஒப்படைத்தார்.

waqf board handed over the administration of the Nagore dargah  Nagore dargah  waqf board  waqf board handed over Nagore dargah  nagapattinam Nagore dargah  நாகூர் தர்காவை பரம்பரை டிரஸ்டிகளிடம் ஒப்படைத்த வக்ஃப் வாரியம்  நாகூர் தர்கா  வக்ஃப் வாரியம்  நாகூர் தர்காவை ஒப்படைத்த வக்ஃப் வாரியம்  சென்னை உயர்நீதி மன்றம்  நாகப்படினம் நாகூர் தர்கா விவக்காரம்  கைமாற்றி விடப்பட்ட நாகூர் தர்கா
நாகூர் தர்கா

நாகப்பட்டினம்: கடந்த 2017ஆம் ஆண்டு, நாகூர் ஆண்டவர் தர்காவை நிர்வகிப்பது குறித்து சில குழப்பங்கள் ஏற்பட்டது. இதனால், தர்காவை நிர்வாகிக்க, தற்காலிக கமிட்டி அமைக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதன் அடிப்படையில், 2017ஆம் ஆண்டு, தற்காலிக கமிட்டி அமைக்கப்பட்டது. மேலும் இந்த கமிட்டி நான்கு மாதங்களுக்கு மட்டுமே, தர்காவை நிர்வகிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், 2017 முதல் 2022 வரை தற்காலிக கமிட்டியே, தர்காவை நிர்வகித்து வந்தது.

இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற நாகூர் தர்காவின் விழாவில், ஒருவரை அனுமதிப்பது தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டது. இந்த வழக்கில், நாகூர் தர்காவின் தற்காலிக நிர்வாக கமிட்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

நாகூர் தர்காவை பரம்பரை டிரஸ்டிகளிடம் ஒப்படைத்த வக்ஃப் வாரியம்

இதனை விசாரித்த தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி மற்றும் பரத சக்ரவர்த்தி ஆகியோர், மேல்முறையீடு மனுவை ரத்து செய்து, தர்கா நிதியை தேவையின்றி பயன்படுத்தி மேல்முறையீடு செய்ததற்காக, தற்காலிக கமிட்டிக்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும், தற்காலிக கமிட்டியிடம் இருந்த நிர்வாக பொறுப்பை, வக்ஃப் வாரியம் உடனடியாக ஏற்க உத்தரவிட்டனர்.

இதன்படி, கடந்த பிப்ரவரி மாதம் முதல், வக்ஃப் வாரிய அலுவலர்கள், தர்காவின் நிர்வாகத்தை ஏற்றுக்கொண்டனர். இந்நிலையில், தர்காவின் பொறுப்பை, தர்காவின் பாரம்பரிய டிரஸ்டிகளிடம் ஒப்படைக்கக்கோரி, தர்காவின் 11 பரம்பரை டிரஸ்டிகள், சென்னை உயர் நீதிமன்றத்தில், முறையீடு செய்தனர்.

இதனை விசாரித்த தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்ரவர்த்தி ஆகியோர், ஒரு வார காலத்திற்குள், நாகூர் தர்காவின் நிர்வாகப் பொறுப்பை, தர்காவின் பரம்பரை அறங்காவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கடந்த 6ஆம் தேதி உத்தரவிட்டிருந்தனர்.

அந்தவகையில், வக்ஃப் வாரிய முதன்மை செயல் அலுவலர் வசீர் அகமது, இன்று (ஏப்ரல் 13) நாகூர் தர்காவின் நிர்வாகப் பொறுப்பினை முறைபடி, தர்காவின் பரம்பரை டிரஸ்டிகளிடம் ஒப்படைத்தார். சுமார் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, தர்காவின் நிர்வாகப் பொறுப்பை, தர்காவின் பரம்பரை டிரஸ்டிகள் ஏற்றுக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஆயுள் தண்டனை கைதி விடுதலையில் தாமதம் : அதிரடி உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.