ETV Bharat / state

மகாராஷ்டிராவில் சிக்கித் தவிக்கும் தமிழக தொழிலாளர்கள்

author img

By

Published : Apr 29, 2020, 8:19 PM IST

TN Labourer stranded in Maharastra amid lockdown, urging Govt to take necessary action
TN Labourer stranded in Maharastra amid lockdown, urging Govt to take necessary action

நாகை: சீர்காழியைச் சேர்ந்த சிலை வடிக்கும் தொழிலாளர்கள் 100 பேர் மகாராஷ்டிராவில் சிக்கித் தவிக்கின்றனர். தங்களை மீட்குமாறு வாட்ஸ்அப் வீடியோ வெளியிட்டு தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை, பூம்புகார், சீர்காழி உள்ளிட்ட அதன் சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட சிலை வடிக்கும் தொழிலாளர்கள், மூன்று மாதங்களுக்கும் மேலாக மகாராஷ்டிரா மாநிலத்தில் வேலை செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் அமலில் உள்ள 144 தடை உத்தரவால் கடந்த ஒரு மாதமாக வேலைவாய்ப்பின்றி உணவிற்கு வழியில்லாமல் சிக்கித் தவிக்கின்றனர்.

மகாராஷ்டிராவில் சிக்கி தவிக்கும் நாகை சிற்பி தொழிலாளர்கள்

அந்தப் பகுதியில் உள்ள அரசு அலுவலர்கள் தங்களுக்கு உதவ முன்வரவில்லை எனவே தங்களை மீட்குமாறு வாட்ஸ்அப் வீடியோ மூலம் தமிழ்நாட்டு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

அங்கு சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களை தமிழ்நாட்டிற்கு பாதுகாப்பாக அழைத்துவர வேண்டுமென அவர்களது உறவினர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: மலைக்கிராம மக்களுக்கு உதவிய தனியார் சோலார் நிறுவனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.