ETV Bharat / state

மாரடைப்பால் உயிரிழந்த தாய் - சுகாதாரத்துறை அலட்சியம்

author img

By

Published : Aug 20, 2020, 4:22 AM IST

police
police

நாகப்பட்டினம்: மயிலாடுதுறையில் கரோனா பரிசோதனை முடிவு வரவில்லை எனக் கூறி மாரடைப்பால் உயிரிழந்த தாயின் உடலை தர மறுத்த சுகாதாரத் துறையால் மகன் கண்ணீர் வடிக்கும் காட்சி அரங்கேறியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை அருகே நாகங்குடியைச் சேர்ந்தவர் மலர்க்கொடி(58). அண்மையில் மாரடைப்பு காரணமாக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில், கரோனா பரிசோதனை செய்யப்பட்டு மாதிரிகள் திருவாரூர் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டன.

கரோனா டெஸ்ட் ரிசல்ட் வரும் முன்பே மலர்க்கொடி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், மலர்க்கொடியின் மகன் சுகுமார், தாயின் உடலை பெற முயன்றார். ஆனால், கரோனா முடிவு வர தாமதமானதால் மருத்துவமனை நிர்வாகம் மலர்க்கொடியின் உடலை தர மறுத்துள்ளனர். மேலும், இறந்து 24 மணிநேரத்திற்குள் அடக்கம் செய்ய வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, மலர்க்கொடியின் உடலை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபரை போன்று சுகாதாரத் துறையினர் தகனம் செய்துள்ளனர். இறந்தவரின் உடல் தகனம் செய்யப்பட்ட நிலையில், அதிகாரப்பூர்வமாக அவருக்கு கரோனா பாதிப்பு இல்லை என்று ரிசல்ட் வந்துள்ளது.

இதனால், மனமுடைந்த சுகுமார் இதுபோன்ற அவலநிலை யாருக்கும் வரக்கூடாது. ஒரே மகனான தனக்கு, தனது தாயின் இறுதிச் சடங்கு செய்ய கூட பாக்கியம் இல்லை என்று கூறி கதறி அழுதார்.

கண்ணீர் வடிக்கும் மகன்

மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு 37 லட்சம் ரூபாய் செலவில் கரோனா பரிசோதனை செய்யும் கருவியை தமிழ்நாடு அரசு ஒதுக்கியும் அதை இயக்குவதற்கான மைக்ரோ பயாலஜிஸ்ட் மற்றும் லேப் டெக்னிசியன்; இதுவரை யாரும் பணியமர்த்தவில்லை. இந்தக் கருவியால் நாளொன்றுக்கு 240 பேருக்கு பரிசோதனை செய்யமுடியும். இனிமேல் இதுபோன்ற துயர சம்பவம் நடக்காமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.

இதையும் படிங்க: வெள்ளத்தால் சூழ்ந்த ஏனாம் பகுதி - பணிகளை துரிதப்படுத்த முதலமைச்சர் உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.