ETV Bharat / state

மீனவர்கள் ஆழ்கடலுக்கு செல்ல வேண்டாம் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அறிவுறுத்தல்

author img

By

Published : Nov 23, 2020, 9:05 AM IST

மயிலாடுதுறை: வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக உருவாகும் என்பதால் மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அறிவுறுத்தியுள்ளார்.

அமைச்சர் ஓ.எஸ்.மணியன்
அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

நாகையிலிருந்து தனியாக பிரிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தில் 8 மீனவ கிராமங்கள் உள்ளன. அம்மாவட்ட மீனவ கிராமங்களின் தலைமை மீனவ கிராமமாக தரங்கம்பாடியை பெரும்பாலான மீனவ கிராமங்கள் ஏற்றுகொண்டதால், கடந்த 19ம் தேதி தலைமை மீனவ கிராமமாக தரங்கம்பாடி பஞ்சாயத்தார்களுக்கு தரங்கம்பாடி, சீர்காழி தாலுகா பகுதிகளை சேர்ந்த மீனவ கிராமங்களான கொடியம்பாளையம், சின்னகொட்டாய்மேடு, தொடுவாய், கீழமூவர்க்கரை, சாவடிகுப்பம், வானகிரி, சின்ன மேடு, சின்னங்குடி, தாழம்பேட்டை, புதுப்பேட்டை, வெள்ளக்கோயில், பழையார், தர்காஸ், நாயக்கர்குப்பம், மேலமூவர்க்கரை உள்ளிட்ட 19 மீனவ கிராமங்களைச் சேர்ந்த பஞ்சாயத்தார் மற்றும் பொதுமக்கள் சீர்வரிசை எடுத்துவந்து பரிவட்டம் கட்டினர்.

இதனையடுத்து, தரங்கம்பாடி பஞ்சாயத்தார்கள் 18 பேர் பரிவட்டத்தை கட்டிக் கொண்டு தலைமை பொறுப்பை ஏற்றுக் கொண்டனர்.

இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்ட தலைமை மீனவ பஞ்சாயத்தார்களை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நேற்று (நவ.23) சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து பேசிய அவர், “இன்று முதல் 26 ஆம் தேதி வரை வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதனால், மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம்” என அறிவுறுத்தினார்.

மேலும் படகுகள், மீன்பிடி சாதனங்களைப் பாதுகாப்பான முறையில் வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.

அப்போது, அம்மாவட்ட அதிமுக செயலாளர் செந்தில்நாதன், பூம்புகார் தொகுதி சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் எஸ்.பவுன்ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: நிவர் புயல்: 13 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.