ETV Bharat / state

புற்றடி மாரியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

author img

By

Published : Apr 29, 2019, 11:53 PM IST

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்காவை அடுத்த ஆதனூரில் உள்ள பழமைவாய்ந்த ஸ்ரீ புற்றடி மாரியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மகா கும்பாபிஷேகம்

நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா வடகரை அடுத்த ஆதனூரில் பழமை வாய்ந்த புற்றடி மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த பிரசித்தி பெற்ற கோயிலில் மகா கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கடந்த 27ஆம் தேதி விக்னேஸ்வர அனுக்கிரக பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது.

இன்று நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் மூலவர் ஸ்ரீ புற்றடி மாரியம்மனுக்கு புனித கலச நீர் அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Intro:தரங்கம்பாடி தாலுக்கா அகரா ஆதனூரில் உள்ள பழமைவாய்ந்த ஶ்ரீ புற்றடி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம். திரளான பக்தர்கள் தரிசனம்.


Body:நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா வடகரை அடுத்து அகரஆதனூரில் பழமை வாய்ந்த ஶ்ரீ புற்றடி மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 27ஆம் தேதி விக்னேஸ்வர அனுக்கிரக பூஜையுடன் யாகசாலை பூஜைகள் துவங்கியது. தொடர்ந்து நான்கு கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து. மஹா பூர்ணாகுதி மற்றும் மகா தீபாரதனை நடைபெற்றது. பின்னர் சிவாச்சாரியார்கள் கடத்தை சுமந்து ஆலயத்தை சுற்றி வந்து விமான கும்பத்தை அடைந்தனர். அங்கு வேத விற்பன்னர்கள் வேதங்கள் ஓத மேளதாளங்கள் முழங்க விமான கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மூலவர் ஶ்ரீ புற்றடி மாரியம்மனுக்கு புனித கலச நீர் அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.