ETV Bharat / state

மறு வாக்கு எண்ணிக்கைக் கோரி ஆர்ப்பாட்டம்!

author img

By

Published : Jan 3, 2020, 4:43 PM IST

Protest against local body election result in Nagai
Protest against local body election result in Nagai

மறு வாக்கு எண்ணிக்கைக் கோரி மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சுயேட்சை வேட்பாளரின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய வாக்கு எண்ணிக்கை பணிகள் நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில், மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஒன்றிய கவுன்சிலர் ஒன்றாவது வார்டில் சுயேட்சையாக போட்டியிட்ட எமிமாள், அவரது கணவர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மறு வாக்கு எண்ணிக்கை செய்யக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒன்றாவது வார்டு வாக்கு எண்ணிக்கை பணி நேற்று காலை 11 மணியளவில் முடிவடைந்த நிலையில், இரவு 8 மணிவரை வெற்றிபெற்ற வேட்பாளர் குறித்தும், முன்னிலை குறித்தும் எந்தவித அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. பின், நள்ளிரவில் திமுக வேட்பாளர் ஸ்ரீமதி வெற்றிபெற்றதாக அறிவித்துள்ளனர்.

மறுவாக்கு எண்ணிக்கை கோரி ஆர்ப்பாட்டம்

வாக்குப் பெட்டிகள் வேட்பாளர்கள், முகவர்கள் இல்லாமல் பிரிக்கப்பட்டு எண்ணப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டிய அவர்கள், ஒன்றாவது வார்டில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு திடீர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம் நடப்பதை அறிந்து தேர்தல் நடத்தும் அலுவலர் பாலமுருகன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் புகாரை பெற்றுக்கொண்டார்.

இதையும் படிங்க: வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி - ஜோதிமணி எம்.பி தர்ணா

Intro:மறுவாக்குப்பதிவு கோரி மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சுயேட்சை வேட்பாளர் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு:-Body:மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய வாக்கு எண்ணிக்கை பணிகள் முடிந்து வெற்றிபெற்ற வேட்பாளர்கள் அறிவிப்பு செய்யும் பணிகள் இன்று அதிகாலை 5 மணியளவில் முடிவடைந்தது. இந்நிலையில் இன்று மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஒன்றிய கவுன்சிலர் 1வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட்ட எமிமாள்; கணவர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மறுவாக்குப்பதிவு செய்ய கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 1வது வார்டு வாக்கு எண்ணிக்கை பணி நேற்று காலை 11 மணியளவில் முடிவடைந்த நிலையில் இரவு 8 மணிவரை வெற்றிபெற்ற வேட்பாளர்கள் யார் என்றும், முன்னிலையில் யார் இருக்கிறார் என்பது குறித்து எந்தவித அதிகார பூர்வமான அறிவிப்பும் செய்யவில்லை. நள்ளிரவில் திமுக வேட்பாளர்கள் ஸ்ரீமதி வெற்றிபெற்றதாக அறிவித்துள்ளனர். வாக்குபெட்டிகள் வேட்பாளர்கள், முகவர்கள் இல்லாமல் பிரிக்கப்பட்டு எண்ணப்பட்டுள்ளது. எனவே 1வது வார்டில் வேட்பாளர்கள், முகவர்கள் முன்னிலையில் மீண்டும் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு திடீர் ஆர்பாட்டம் நடத்தி முழக்கமிட்டனர். ஆர்ப்பாட்டம் நடப்பதை அறிந்து மாவட்ட கவுன்சிலர்களுக்கான தேர்தல் நடத்தும் அலுவலர் பாலமுருகன் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அவர்கள் அளித்த புகாரை பெற்றுகொண்டார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.