ETV Bharat / state

குறைந்த விலைக்கு சாராயம் கேட்டு தகராறு - கள்ளச்சாராய விற்பனையாளர் கைது

author img

By

Published : Dec 15, 2022, 6:51 PM IST

மயிலாடுதுறை அருகே குறைந்த விலைக்கு சாராயம் கேட்டு தகராறு நடந்த நிலையில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், கள்ளச்சாராய விற்பனையாளரை கைது செய்தனர்.

Etv Bharat
Etv Bharat

சாராய பாக்கெட்டுகளை உடைத்த காவலர்

மயிலாடுதுறை: தரங்கம்பாடி தாலுக்கா மருதம்பள்ளம் கிராமத்தில் மாற்றுத்திறனாளியான கந்தன் (60) என்பவர் சட்டவிரோதமாக பாக்கெட் சாராயம் விற்பனையில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக தெரிகிறது.

பலமுறை சாராய வியாபாரி கந்தனை காவல் துறையினர் கைது செய்த போதிலும் கால்களில் உள்ள காயங்களின் காரணமாக கிளை சிறைச்சாலை முதல் மத்திய சிறைச்சாலைகள் வரை கந்தனை அழைப்பு காவலுக்கு எடுத்துக் கொள்வதில்லை.

இதனால் காவல் துறையினர் அவர் மீது அபராதம் செலுத்தக்கூடிய பிரிவுகளின் கீழ் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் கந்தன் சாராயம் விற்குமிடத்தில் சாராய விற்பனை செய்து கொண்டிருந்த ஜெயகாந்தன் என்பவரிடம் சிலர் குறைவான பணத்தை கொடுத்து சாராயம் வாங்கியுள்ளனர்.

அதனைக் கண்ட மற்றவர்களும் குறைந்த விலைக்கு சாராயம் கேட்டதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த பொறையாறு காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாராய பாக்கெட்டுகளை கைப்பற்றி அதே இடத்தில் உடைத்து அழித்தனர்.

தொடர்ந்து சாராயம் விற்ற ஊழியர் ஜெயகாந்தனை (37) கைது செய்த காவல் துறையினர், சாராயா வியாபாரி கந்தனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: கோவை பாலமலை வனப்பகுதியில் கஞ்சா வளர்ப்பு; முதியவர் உட்பட 4 பேர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.