ETV Bharat / state

சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் செல்லும் 1.75 லட்சம் கனஅடி வெள்ள நீர்!

author img

By

Published : Oct 16, 2022, 8:00 PM IST

வெள்ள அபாய எச்சரிக்கை
வெள்ள அபாய எச்சரிக்கை

சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் 1.75 லட்சம் கனஅடி நீர் செல்வதால் ஆற்றின் உள்ளே அமைந்துள்ள திட்டுக்கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை: காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ள நீர் முழுவதுமாக மேட்டூர் அணையிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. தற்பொழுது மாலை 1.75 லட்சம் கன அடி வரை வெள்ளநீர் வெளியேற்றப்பட்டு வருவதாகத்தெரிகிறது.

கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்படும் வெள்ள நீரானது மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஆற்றின் வழியே சென்று பழையாறு அருகே கடலில் கலந்து வருகிறது. இதன் காரணமாக கொள்ளிடம் ஆற்றின் உள்ளே அமைந்துள்ள திட்டுக்கிராமங்களான நாதல்படுகை, முதலைமேடு திட்டு, வெள்ளைமணல், கோரை திட்டு உள்ளிட்ட கிராமங்களில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக வெள்ள அபாய எச்சரிக்கை வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் கிராமங்களில் தாழ்வானப்பகுதியில் வசிக்கும் மக்கள் தங்கள் உடைமைகளுடன் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். இந்த ஆண்டு ஐந்தாவது முறையாக கொள்ளிடம் ஆற்றில் வெள்ள நீர் திறக்கப்பட்டுள்ளது.

வெள்ள அபாய எச்சரிக்கை

இதனால் கொள்ளிடம் ஆற்றில் அமைந்துள்ள திட்டுக்கிராம மக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். தண்ணீரின் அளவு அதிகரிக்கும் பட்சத்தில் 4 கிராமங்களுக்கான சாலைப்போக்குவரத்து துண்டிக்கப்படும் நிலை ஏற்படும். எனவே மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதையும் படிங்க: ஈரோடு காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - பொதுமக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்கவைப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.