ETV Bharat / state

மது குடிக்க பணம் தரமறுத்த சகோதரியை கொல்ல முயன்ற சகோதரர் உயிரிழப்பு

author img

By

Published : Feb 22, 2020, 1:46 AM IST

நாகப்பட்டினம்: சீர்காழி அருகே மது குடிக்க பணம் தர மறுத்த சகோதரி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்க முயன்ற சகோதரரும், அவரை காப்பாற்ற சென்ற உறவினரும் தீயில் கருகி உயிரிழந்தனர்.

நாகப்பட்டினம்: சீர்காழி அருகே குடிக்க பணம் தர மறுத்த சகோதரி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்க முயன்ற சகோதரரும், காப்பாற்ற சென்ற உறவினரும் தீயில் கருகி உயிரிழந்தனர்.
நாகப்பட்டினம்: சீர்காழி அருகே குடிக்க பணம் தர மறுத்த சகோதரி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்க முயன்ற சகோதரரும், காப்பாற்ற சென்ற உறவினரும் தீயில் கருகி உயிரிழந்தனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகே புத்துார் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ். இவர் கடந்த 15ம் தேதி திருவள்ளுர் நகரில் வசிக்கும் தனது சகோதரி மஞ்சுளா வீட்டிற்குச் சென்று மது குடிக்க பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். அவர் தர மறுத்ததால், மகேஷ் தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து மஞ்சுளா மீது ஊற்ற முயன்றுள்ளார்.

குடிக்க பணம் தராத சகோதரியை பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய முயன்ற சகோதரர்

இதனை அருகில் இருந்த உறவினரான தமிழரசன் தடுக்க முயன்ற போது, அவர் மீதும் மகேஷ் மீதும், பெட்ரோல் கொட்டியது. ஆத்திரத்தில் இருந்த மகேஷ் தீயை பற்ற வைத்ததில் மகேஷ், தமிழரசன் இருவரும் தீ பிடித்து எரிந்துள்ளனர்.

படுகாயம் அடைந்த இருவரும் மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மகேஷ், தமிழரசன் இருவரும் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதுகுறித்து சீர்காழி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க:ஒரு தலைக் காதல் விவகாரம்: பெண்ணுக்கு தீ வைத்த நடத்துனர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.