ETV Bharat / state

மனநலம் பாதித்த சிறுமிக்கு பாலியல் தொல்லை: பால் வியாபாரி போக்சோவில் கைது!

author img

By

Published : Apr 28, 2021, 2:24 PM IST

மனநலம் பாதித்த சிறுமிக்கு பாலியல் தொல்லை
மனநலம் பாதித்த சிறுமிக்கு பாலியல் தொல்லை

நாகப்பட்டினம்: மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த பால் வியாபாரியை காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கைதுசெய்தனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த கருவேலங்கடை மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பால் வியாபாரி சுந்தரபாண்டியன் (39). இவர், நாகையில் பாபாக்கோயில் பகுதியிலுள்ள வீடுகளுக்கு பால் விற்பனை செய்துவருகிறார்.

இந்நிலையில், அங்குள்ள ஒரு வீட்டில் தனியாக இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமியிடம் சுந்தரபாண்டியன் கத்தியை காட்டி மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.

இது குறித்து சிறுமி தனது தாத்தாவிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவர் நாகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

அப்புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சுந்தரபாண்டியனை போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்தனர்.

இதையும் படிங்க: பள்ளி மாணவிக்குப் பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.