நாகப்பட்டினத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய டெல்டா விவசாயிகள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வலியுறுத்தி பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அவரி திடலில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பினர்.
அப்போது, திருச்சி, கரூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள வேளாண் பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் இணைத்திட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மேலும். வேளாண் மண்டல மேம்பாட்டு அதிகார அமைப்பில் விவசாய சங்க பிரதிநிதிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். அதேபோன்று கடலோர பகுதியையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் இணைத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதையும் படிங்க: 'அடடா மழைடா... கனமழைடா' - குமரியில் வாகன ஓட்டிகள் அவதி