ETV Bharat / state

இரண்டு லட்சத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை

author img

By

Published : Mar 13, 2021, 10:31 PM IST

மயிலாடுதுறை பறக்கும் படையினர்
மயிலாடுதுறை பறக்கும் படையினர்

மயிலாடுதுறை: சீர்காழி அருகே உரிய ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட 2 லட்சத்து 88 ஆயிரத்து 830 ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

தமிழ்நாட்டில் ஏப்ரல் ஆறாம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதைத் தடுக்கும் விதமாக பல்வேறு இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா மங்கைமடத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியே வந்த வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டதில் தஞ்சாவூரைச் சேர்ந்த விஜயபாரதி என்பவர் உரிய ஆவணங்களின்றி எடுத்துவந்த 2 லட்சத்து 88 ஆயிரத்து 830 ரூபாய் பணத்தை மணிகண்டன் கூட்டுறவு சார் பதிவாளர் தலைமையிலான பறக்கும் படை அலுவலர்கள் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.