ETV Bharat / state

ஊருக்குள் புகுந்த ராட்சத முதலை: பிடிக்க சாவகாசமாக 4 மணி நேரம் கழித்துவந்த வனத் துறை!

author img

By

Published : Jun 5, 2021, 10:33 AM IST

Updated : Jun 5, 2021, 2:19 PM IST

முதலை
crocodile

மயிலாடுதுறை: கிராமத்திற்குள் நுழைந்த ராட்சத முதலையைப் பிடித்திட, நான்கு மணி நேரம் கழித்து பொறுமையாக வனத் துறையினர் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே கொள்ளிடம் ஆற்றிலிருந்து சுமார் 300 கிலோ எடையும், 10 அடி நீளமும் கொண்ட ராட்சத முதலை கரையோரம் உள்ள சித்தமல்லி கிராமத்திற்கு வந்துள்ளது. இதைப் பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், முதலையை கயிறு மூலம் தற்காலிகமாகக் கட்டிவைத்தனர். இது குறித்து காவல் துறைக்கும், வனத் துறைக்கும் தகவல் அளிக்கப்பட்டது.

ஆனால், முதலை பிடிப்பட்டது தொடர்பாகத் தகவல் அளித்து நான்கு மணி நேரமாகியும் வனத் துறை வரவில்லை எனக் கூறப்படுகிறது. அங்கு முதலையைப் பார்க்க ஏராளமான மக்கள் ஒன்றுகூடினர். ஆபத்தை உணராத மக்கள், முதலை மீது தண்ணீர் ஊற்றியும் சீண்டிக் கொண்டிருந்தனர். முதலை பிடிப்பட்ட காணொலி சமூக வலைதளத்தில் பகிரப்பட்டது.

ஊருக்குள் புகுந்த ராட்சத முதலை

இந்நிலையில், நான்கு மணி நேரத்திற்குப் பிறகு சம்பவ இடத்திற்கு வந்த வனச்சரக அலுவலர் குமரேசன் தலைமையிலான சீர்காழி வனத் துறையினரும், மயிலாடுதுறை வனச்சரக ஊழியர்களும் கயிறு மூலம் முதலையின் வாயைக் கட்டி வாகனத்தில் ஏற்றினர். அந்த முதலையை அணைக்கரையில் உள்ள கொள்ளிடத்தில் கொண்டுவிட்டனர்.

ராட்சத முதலையைப் பிடித்த வனத் துறை

இதுபோன்று கொள்ளிடம் ஆற்றில் ஏராளமான முதலைகள் இருப்பதால், அவற்றையும் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

Last Updated :Jun 5, 2021, 2:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.