ETV Bharat / state

இருசக்கர வாகன விபத்தில் இளைஞர் உயிரிழப்பு - பதறவைக்கும் சிசிடிவி காட்சி

author img

By

Published : Mar 12, 2022, 2:51 PM IST

Updated : Mar 12, 2022, 4:03 PM IST

இருசக்கர வாகன விபத்து
இருசக்கர வாகன விபத்து

வாடிப்பட்டி அருகே சாலையை கடக்க முயன்ற சரக்கு வாகனத்தின் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

மதுரை: வாடிப்பட்டி குமரன் நர்சரி கார்டனை சேர்ந்தவர் குருசாமி. இவர் சரக்கு வாகனத்தை ஒட்டிச் சென்று மதுரை - திண்டுக்கல் நான்குவழிச் சாலையை கடப்பதற்காக சாலையின் நடுவே நின்றுகொண்டிருந்தார். அப்போது திண்டுக்கல்லிலிருந்து மதுரை நோக்கி அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் ஒன்று சரக்கு வாகனத்தின் மீது மோதியது.

இருசக்கர வாகன விபத்து

இதில், சம்பவ இடத்திலேயே இருசக்கர வாகனத்தில் வந்த அருண் (20) என்ற இளைஞர் உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர், இளைஞரின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சரக்கு வாகன ஒட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: சேலத்தில் நடந்து சென்ற பெண்ணிடம் 4 பவுன் தங்க செயின் பறிப்பு

Last Updated :Mar 12, 2022, 4:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.