ETV Bharat / state

திருப்பரங்குன்றம் மலையில் தீ விபத்து: போராடி அணைத்த தீயணைப்பு வீரர்கள்!

author img

By

Published : Apr 9, 2020, 1:17 PM IST

மதுரை: திருப்பரங்குன்றம் மலையில் நேற்று திடீரென ஏற்பட்ட தீ விபத்தை, தீயணைப்பு துறையினர் போராடி கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

மலையில் ஏற்பட்ட தீ விபத்து
மலையில் ஏற்பட்ட தீ விபத்து

மதுரை திருப்பரங்குன்றம் புதிய மலை பாதையில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் செல்லும் வழியில் உள்ள புற்களில் நேற்று மாலை திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது. தீ மளமளவென மலைகளில் பரவத்தொடங்கியது. மேலும், அங்குள்ள வயல்வெளிகளிலும் தீ பரவியது.

இதனைக் கண்ட பொதுமக்கள் தீயணைப்பு துறைக்கும், வனத் துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில் மதுரை தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையில் இரண்டு தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை போராடி கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

மலையில் ஏற்பட்ட தீ விபத்து
கடந்த ஒரு மாதத்தில் திருப்பரங்குன்றம் மலையில் இரண்டாவது முறையாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கோடை காலம் என்பதால் புற்கள் காய்ந்து தீ விபத்து ஏற்பட்டதா? யாரேனும் வேண்டுமென்றே தீ வைத்தார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: மகா தீப மலையில் தீ வைப்பு: போராடி அனைத்த தீயணைப்பு துறை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.