ETV Bharat / state

'வலி நிவாரண மாத்திரையை போதையாகப் பயன்படுத்தும் பள்ளி மாணவர்கள்...!'

author img

By

Published : Nov 2, 2019, 8:47 AM IST

மதுரை : பள்ளி மாணவர் மத்தியில் வலி நிவாரண மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து ஊசியாக மாற்றி போதையேற்றிக் கொள்ளும் பழக்கம் தமிழ்நாட்டில் வந்துள்ளது என தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் சார்பாக மதுரை மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் காவல் துறை உயர் அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் ஆனந்த் பேசுகையில், "தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் போதைப் பழக்கங்கள் சமீபகாலமாக அதிகரித்துவருகிறது. அதனை தடுப்பதற்கும் கட்டுப்படுத்த தற்போது தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம், காவல் துறை இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார்கள்.

அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்பு புதுக்கோட்டையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வலி நிவாரண மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து ஊசியாக மாற்றி போதையேற்றும் பழக்கத்தை மாணவர் மத்தியில் பரப்பியதாக சுமார் ஐந்து பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் ஆனந்த் செய்தியாளர் சந்திப்பு

மேலும், வலி நிவாரண மாத்திரைகளை தண்ணீர் கரைத்து ஊசி மூலம் உடலில் ஏற்றிக் கொள்ளும் பழக்கம் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் மத்தியில் பரவத் தொடங்கியுள்ளது பெரும் அதிர்ச்சி அளிக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளது. இருப்பினும் அதனைக் கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும் தொடர்ந்து தேசிய குழந்தைகள் பாதுகாப்பு உரிமை ஆணையம் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:

வழக்கறிஞர்களும் காவல் துறையினரும் நண்பர்களாக இருங்க! - நீதிபதி அறிவுரை

Intro:*பள்ளி மாணவர் மத்தியில் வலி நிவாரண மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து ஊசியாக மாற்றி போதை ஏற்றிக் கொள்ளும் பழக்கம் தமிழகத்தில் வந்துள்ளது தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் ஆனந்த்*Body:*பள்ளி மாணவர் மத்தியில் வலி நிவாரண மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து ஊசியாக மாற்றி போதை ஏற்றிக் கொள்ளும் பழக்கம் தமிழகத்தில் வந்துள்ளது தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் ஆனந்த்*




தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் சார்பாக மதுரை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது,

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் ஆனந்த் பேசுகையில்,

தமிழகத்தில் பள்ளி கல்லூரி மாணவர்கள் மத்தியில் போதைப் பழக்கங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது, அதனை தடுப்பதற்கும் கட்டுப்படுத்த தற்போது தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் காவல் துறையும் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்,அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்பு புதுக்கோட்டையில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு வலி நிவாரண மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து ஊசியாக மாற்றி போதையேற்றும் பழக்கத்தை மாணவர் மத்தியில் பரப்பியதாக சுமார் ஐந்து பேரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர், அதைத்தொடர்ந்து அதன் அடிப்படையை தமிழகத்தில் பல மாவட்டங்களில் பள்ளி கல்லூரி மாணவர்கள் இந்த பழக்கத்திற்கு அடிமையாகி விட்டதாகவும் இது போன்ற மாத்திரைகள் இங்கும் தமிழகத்திலும் வலி நிவாரண மாத்திரைகளை தண்ணீர் கரைத்து ஊசி மூலம் உடலில் ஏற்றுக் கொள்ளும் பழக்கம் தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் மத்தியில் பரவ தொடங்கியுள்ளது பெரும் அதிர்ச்சி அளிக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளது, இருப்பினும் அதனை கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும் தொடர்ந்து தேசிய குழந்தைகள் பாதுகாப்பு உரிமை ஆணையம் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.