ETV Bharat / state

மேலவளவு கொலை வழக்கு: 13 பேர் விடுதலை குறித்து அரசு நிலை அறிக்கைத் தாக்கல் செய்ய ஆணை!

author img

By

Published : Nov 25, 2019, 2:50 PM IST

மதுரை: மேலவளவு பஞ்சாயத்துத் தலைவர் முருகேசன் உட்பட 7 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதாகி சிறையில் இருந்த 13 பேர் விடுதலையான வழக்கில், அது குறித்து நிலை அறிக்கையை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

Melavalavu massacre: Chennai HC branch Order to TN govt to file report

கடந்த 1996ஆம் ஆண்டு பட்டியலினத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவர், மேலவளவு பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு, அதில் வெற்றி பெற்றார். இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக முருகேசன் உட்பட 7 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 17 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டதை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது.

ஏற்கெனவே, அண்ணா பிறந்தநாளில் குற்றவாளிகள் மூன்று பேர் நன்னடத்தைக் காரணமாக முன் விடுதலை செய்யப்பட்டனர். மீதமுள்ள 14 பேரில் ஒருவர் உயிரிழந்த நிலையில், தற்போது எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மீதமுள்ள 13 பேர் முன்விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இதனை எதிர்த்து வழக்கறிஞர் ரத்தினம் என்பவர் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் வைத்தியநாதன், ஆனந்த வெங்கடேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு, அரசிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி, விடுதலை செய்யப்பட்ட 13 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பவும், நிலை அறிக்கைத் தாக்கல் செய்யவும் கோரி உத்தரவிட்டிருந்தது.

மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அறிக்கைத் தாக்கல் செய்ய அரசுத் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. அதேபோல் 13 பேருக்கும் நீதிமன்றத்தின் நோட்டீஸ் சென்றடையவில்லை எனவும் கூறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, 13 பேருக்கும் நீதிமன்றம் அனுப்பிய நோட்டீஸை மேலூர் டி.எஸ்.பி. கொண்டு சேர்ப்பதை உறுதிப்படுத்த உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை நவம்பர் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். மேலும், அன்றைய தினம் அரசுத் தரப்பில் நிலை அறிக்கையையும் தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: சாரதா சிட்பண்ட் மோசடி - ராஜிவ்குமாரின் முன்ஜாமினை ரத்து செய்யக்கோரிய விசாரணை ஒத்திவைப்பு!

Intro:Body:மேலவளவு பஞ்சாயத்து தலைவர் முருகேசன் உட்பட 6 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 13 பேர் விடுதலை செய்யபட்ட வழக்கு....

மேலவளவு பஞ்சாயத்து தலைவர் முருகேசன் உட்பட 6 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதாகி சிறையில் இருந்த 13 பேர் விடுதலையான வழக்கில் விடுதலையான 13 பேருக்கு நீதிமன்ற நோட்டீஸ் சென்றடைந்ததை உறுதி செய்ய காவல்துறைக்கும் உத்தரவிட்டு
13 பேரின் விடுதலை குறித்து தற்போதைய நிலை அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவு



கடந்த 1996 ஆம் ஆண்டு ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த முருகேசன் என்பவர்  மேலவளவு பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றிபெற்றார். இதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக  முருகேசன் உட்பட 6 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 17 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. அதனை உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது.

ஏற்கனவே, அண்ணா பிறந்தநாளில் அவர்களில் மூன்று பேர் நன்னடத்தைக் காரணமாக முன்விடுதலை செய்யப்பட்டனர். மீதமுள்ள 14 பேரில் 1 உயிரிழந்த நிலையில், தற்போது எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மீதமுள்ள 13 பேர் முன்விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், வழக்கறிஞர் ரத்தினம் அதனை எதிர்த்து வழக்கு தொடர, விடுதலை செய்யவதற்காக பிறப்பிக்கப்பட்ட அரசாணை தேவை என்பதால் அதன் நகலை வழங்கக் கோரி வழக்கு தொடர்ந்திருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் வைத்தியநாதன் -ஆனந்த வெங்கடேஷ் அமர்வு விசாரணையை செய்து

அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியது இந்நிலையில்
விடுதலை செய்யப்பட்ட 13 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பவும், அரசு இது குறித்து நிலை அறிக்கை தாக்கல் உத்தரவிட்டிருந்த்து இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணை க்கு வந்த்து அப்போது அரசு தரப்பில் கால அவகாசம் கோரா பட்டது

அதே போல் 13 பேருக்கும் நீதிமன்றம் நோட்டீஸ் சென்று அடைய வில்லை என கூற பட்டது இதனை தொடர்ந்து நீதிபதிகள்
நீதிமன்ற அனுப்பிய நோட்டீஸை
மேலூர் டி.எஸ்.பி அதனை கொண்டு சேர்ப்பதை உறுதிப்படுத்தவும் உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 27 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். அன்றைய தினம் அரசுத்தரப்பில் நிலை அறிக்கையைம் தாக்கல் செய்ய உத்தரவு..Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.