ETV Bharat / state

முகக் கவசங்கள் பதுக்கல் - மருந்தகங்களில் அதிரடி சோதனை

author img

By

Published : Mar 24, 2020, 11:05 PM IST

madurai-pharmacies
madurai-pharmacies

மதுரை: மருந்தகங்களில் முகக் கவசங்கள், கிருமி நாசினிகள் பதுக்கல் காரணமாக குடிமைப்பொருள் வழங்கல் கடத்தல் தடுப்புப் பிரிவினர் அதிரடி சோதனை நடத்தினர்.

கரோனா வைரஸ் பரவல் காரணமாக மருந்தகங்களில் முகக் கவசங்கள், கிருமி நாசினிகளுக்கு தட்டபாடு ஏற்பட்டுள்ளது. அதனை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு சில மருந்தக உரிமையாளர்கள் அவற்றை அதிக விலைக்கு விற்றுவருகின்றனர். அதனால் அரசு முகக் கவசங்கள், கிருமி நாசினிகளை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்திருந்தது.

அதைத்தொடர்ந்து, மார்ச் 24ஆம் தேதி மாலை 6 மணி முதல் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மதுரையில் செயல்படும் சில மருந்தகங்களில் கிருமி நாசினிகள், முகக் கவசங்கள் பதுக்கி வைக்கப்படுள்ளதாக, மாவட்ட குடிமை பொருள் வழங்கல் கடத்தல் தடுப்புப் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

மருந்தகங்களில் அதிரடி சோதனை

அந்தத் தகவலையடுத்து கடத்தல் தடுப்புப் பிரிவினர், சம்பந்தப்பட்ட மருந்தகங்களுக்குச் சென்று அதிரடி சோதனை நடத்தினர். சோதனையில் அங்கு விற்பனைக்கில்லை என பதுக்கி வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட முகக் கவசங்களைப் பறிமுதல் செய்து உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அளித்தனர். அதன்பின் முகக் கவசங்கள், கிருமி நாசினிகளை அதிக விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்க விடுக்கப்பட்டது.

இதையும் படிங்க: இலவசமாக முகக்கவசம் வழங்கிவரும் காய்கறி வியாபாரி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.