ETV Bharat / state

மதுரையில் குடும்ப பிரச்னையால் மனைவி கொலை - கணவன் தப்பி ஓட்டம்

author img

By

Published : Mar 18, 2020, 7:38 PM IST

மனைவி கொலை
மனைவி கொலை

மதுரை: குடும்ப பிரச்னை காரணமாக மனைவியை கழுத்து நெரித்துக் கொலை செய்துவிட்டு கணவன் தப்பி ஓடிய சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை திருநகர் எஸ்ஆர்வி நகர் சூறாவளிமேடு பகுதியைச் சேர்ந்தவர்கள் அசோக், சுதா தம்பதி. இருவரும் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஆறு வயதில் பெண் குழந்தையும், நான்கு வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர்.

காதல் திருமணம் செய்து சந்தோஷமாக சென்ற இவர்களது வாழ்க்கை அசோக் வேலைக்குச் செல்லாமல் இருந்ததால் சச்சரவாக மாறியது. அசோக் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதால் சுதாவுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் அசோக் குடித்துவிட்டு வந்ததால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு உள்ளது.

மனைவி கொலை

வழக்கமாக நடக்கும் நிகழ்வு என்பதால் அக்கம் பக்கத்தினரும் கண்டுகொள்ளவில்லை. இன்று காலை வீட்டின் கதவு திறக்கப்பட்ட நிலையில், ஆட்கள் யாரும் இல்லாததைக் கண்டு சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் விட்டினுள் சென்று பார்த்தபோது கழுத்தில் காயங்களுடன் சுதா உயிரிழந்து கிடந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

அதனடிப்படையில் வந்த திருநகர் காவல் துறையினர் சுதாவின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது கணவன் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: தகாத உறவால் விபரீதம் - கணவன் கொலை; மனைவி கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.