ETV Bharat / state

மதுரை மாநகராட்சி கூட்டத்தில் சலசலப்பு... பதவி விலகப் போவதாக கூறிய எம்எல்ஏ!

author img

By

Published : Jun 27, 2023, 8:52 AM IST

Updated : Jun 27, 2023, 7:37 PM IST

செய்தியாளர்கள் கேள்விகளுக்கு 15 மாதங்களாக பதில் அளிக்காத மதுரை மேயர்!
செய்தியாளர்கள் கேள்விகளுக்கு 15 மாதங்களாக பதில் அளிக்காத மதுரை மேயர்!

சலசலப்பு, குற்றச்சாட்டுகள், வாக்குவாதம் என பரபரப்புகளுக்கு மத்தியில் நடந்து முடிந்திருக்கிறது மதுரை மாநகராட்சி மாமன்றக் கூட்டம்.

செய்தியாளர்கள் கேள்விகளுக்கு 15 மாதங்களாக பதில் அளிக்காத மதுரை மேயர்!

மதுரை: மதுரை மாநகராட்சி 19வது மாமன்ற கூட்டம் நேற்று (ஜூன் 26) காலை மேயர் இந்திராணி தலைமையில் நடைபெற்றது. இதில், புதிய ஆணையர் பிரவீன்குமார் முதல் முறையாக பங்கேற்றார். இக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய மதுரை தெற்கு தொகுதியின் மதிமுக எம்எல்ஏவான பூமிநாதன் தமது தொகுதியில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படாதது குறித்து ஆதங்கம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதே நிலை தொடர்ந்தால் ராஜினாமா செய்ய வேண்டியது தான் என தமது கட்சி தலைமையிடம் தான் பேசியதாகவும் பூமிநாதன் கூறியுள்ளார்.

மாமன்றக் கூட்டம் நிறைவடைந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த எம்எல்ஏ பூமிநாதன், மாமன்றக் கூட்டத்தில் தான் பதவி விலகுவதாக பேசவில்லை என்றும், மாநகராட்சி சார்பாக நடைபெறும் பல்வேறு பணிகளில் ஆட்கள் பற்றாக்குறை நிலவுவதாகவும், அதனை உடனே சரி செய்ய கோரிக்கை விடுத்ததாகவும் தெரிவித்தார்.

இந்த நிலையில் கூட்டத்தின் நடுவே எதிர்கட்சி மாமன்ற உறுப்பினரான அதிமுகவைச் சேர்ந்த சோலைராஜா பேசிக் கொண்டிருக்கையில் மூன்று நிமிடம் முடிந்ததால் அமருங்கள் என திமுக உறுப்பினர் காளிதாஸ் கூறினார். இதற்கு பதிலடியாக பார்வையாளர் மாடத்தில் இருந்த அதிமுக எதிர்கட்சி மாமன்ற உறுப்பினர் சோலை ராஜாவின் மகன் இளவரசன், மாமன்ற உறுப்பினர்களை எதிர்த்து பேசியதால் வாக்குவாதம் ஏற்பட்டது.

உடனடியாக எதிர்கட்சி மாமன்ற உறுப்பினர் சோலைராஜாவின் மகன் இளவரசன் பார்வையாளர் மாடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதன் காரணமாக மாமன்ற அவையில் சிறிது நேரம் கூச்சலும், குழப்பமும் நிலவியது. இதனையடுத்து கூட்டம் நிறைவு பெற்ற பின்பு வெளியில் வந்த மேயர் இந்திராணியிடம் செய்தியாளர்கள், எம்எல்ஏ மற்றும் உறுப்பினர்களின் குற்றச்சாட்டு குறித்த கேள்வி எழுப்பினர்.

இதையும் படிங்க: "மு.க.ஸ்டாலின் இருக்கிறேன்; நீங்கள் செய்வீர்களா?" - சிற்பி விழாவில் மாணவர்களுக்கு நம்பிக்கையூட்டிய முதல்வர்!

அதற்கு எந்த பதிலும் அளிக்க மறுத்த மேயரை அங்கிருந்து புறப்பட்டார். மேயருக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியில் வெளிநபர்கள் சிலர் ஈடுபட்டிருந்தனர். மாநகராட்சியினுள் அவைக்காவலர்களும், வெளியே காவல்துறையினரும் இருக்கும் நிலையில் வெளிநபர்களின் பாதுகாப்பு எதற்கு என்ற கேள்வி எழுந்துள்ளது. இவர்கள் காவல்துறையினரையும் தள்ளிவிட்டு மேயரை அழைத்துச் சென்றதால் பதற்றம் நிலவியது.

ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பாக மேயர் அறையில் செய்தியாளர்களைச் சிலர் தாக்க முயன்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நேற்று மீண்டும் மேயரைச் சுற்றி திடீரென நபர்கள் சூழ்ந்து இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்புப் பணியில் தாங்கள் இருக்கும்போது இதுபோன்ற சில நபர்கள் வந்து மேயரை அழைத்துச் செல்லும்போது ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் யார் பதில் சொல்வது என காவல் துறை வட்டாரங்கள் கவலை தெரிவிக்கின்றன.

மாநகராட்சி மேயர் இந்திராணி பதவியேற்று 15 மாதங்கள் ஆன நிலையில் இதுவரை செய்தியாளர்களைச் சந்தித்ததே கிடையாது. மேலும், மேயரை தொடர்பு கொள்ள வேண்டுமானால் அவரது கணவரையே முதலில் தொடர்பு கொள்ள வேண்டும் என்ற நிலை தற்போதும் தொடர்கிறது.

இதையும் படிங்க: Karur Corporation: "மரபை மீறும் அதிமுக கவுன்சிலர்கள்" - கரூர் மேயர் கவிதா கணேசன் ஆவேசம்!

Last Updated :Jun 27, 2023, 7:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.