ETV Bharat / state

Madurai train fire: மதுரையில் சுற்றுலா ரயிலில் நிகழ்ந்த தீ விபத்தில் 9 பேர் பலி: விபத்துக்கான காரணம் என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 26, 2023, 10:17 AM IST

Updated : Aug 26, 2023, 1:33 PM IST

Madurai train fire accident: மதுரை ரயில் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில், ரயில் பெட்டியில் கேஸ் சிலிண்டரை கொண்டு சமையல் செய்ததே விபத்துக்கான காரணம் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், விபத்து நிகழ்ந்த ரயில் பெட்டியில் இருந்து சிலிண்டர் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Etv Bharat
Etv Bharat

மதுரை: உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவிலிருந்து 55 பேர் கொண்ட குழுவினர் தென்னிந்தியாவில் உள்ள முக்கிய ஆலயங்களில் சுவாமி தரிசனம் செய்வதற்காக 17ஆம் தேதி யாத்திரைப் பயணிகள் ரயில் மூலமாக தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர். இவர்கள் நேற்று(25.08.2023) நாகர்கோவில் பத்மநாப சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு இன்று(26.08.2023) அதிகாலை மதுரை வந்தடைந்தனர்.

இவர்கள் பயணம் செய்த ரயில் பெட்டி மதுரை சந்திப்பிலிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மதுரை - போடி ரயில் பாதையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதிகாலை சுமார் 5.15 மணியளவில் ரயில் பெட்டியிலிருந்த நபர்கள் சமையல் செய்வதற்காக சிலிண்டரை பயன்படுத்தியபோது தீடிரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

ரயில் பெட்டியில் பயணம் செய்தவர்கள் பாதுகாப்புக்காக உள்பக்கமாக அடைத்து வைத்திருந்ததால் உடனடியாக வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தீ மளமளவெனப் பரவி பெட்டி முழுவதும் கொளுந்துவிட்டு எரியத் தொடங்கியது. பின்னர் அலறியபடி பலர் வெளியேறினர். சம்பவம் குறித்து அறிந்து மதுரை எஸ்.எஸ்.காலனி காவல் நிலைய போலீசார், ரயில்வே போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

சுமார் 1 மணிநேர போராட்டத்திற்கு கொழுந்துவிட்டு எரிந்த தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள் ரயில் பெட்டியிலிருந்து கருகிய நிலையிலிருந்த உடல்களை மீட்டு ரயில்வே காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இதனிடையே, தமிழ்நாடு வணிக வரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மற்றும் ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மூர்த்தி, " ரயில் தீ விபத்தில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும், உயிரிழந்தவர்களின் சடலங்கள் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், ரயில் பெட்டியில் சமையல் செய்ததாலேயே விபத்து நிகழ்ந்துள்ளது தெரியவந்துள்ளது" எனத் தெரிவித்தார்.

  • MADURAI JUNCTION FIRE INCIDENT : HELP LINE NUMBERS

    The following two help line numbers are provided at the site to share the information related to the
    fire incident and causalities
    9360552608
    8015681915

    — Southern Railway (@GMSRailway) August 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்த நிலையில், ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் விபத்து தொடர்பான தகவல்கள், உயிரிழந்தவர்கள் விபரங்களை அறிய 9360552608, 8015681915 என்ற உதவி எண்களை அறிவித்துள்ளது.

விபத்து நிகழ்ந்த ரயில் பெட்டியிலிருந்து கேஸ் சிலிண்டரை தீயணைப்பு வீரர்கள் கண்டெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Aiadmk Case: பொதுக்குழு வழக்கில் ஈபிஎஸ் மீண்டும் வெற்றி.. தீர்ப்பின் முழு விபரம், ஓபிஎஸ் பதில் என்ன?

Last Updated :Aug 26, 2023, 1:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.