பல்லுயிர் பாரம்பரிய இடமாக அறிவிக்கப்பட்ட அரிட்டாபட்டி: சிறப்புகள் என்ன?

author img

By

Published : Nov 22, 2022, 10:45 PM IST

மதுரையில் உள்ள அரிட்டாபட்டி கிராமம் பல்லுயிர் பாரம்பரியம் கொண்ட இடமாக அறிவிப்பு

மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டி கிராமம், தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர் பாரம்பரியம் கொண்ட இடமாக தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல், பருவநிலை மற்றும் வனத்துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை: மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டி கிராமம், தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர் பாரம்பரியம் கொண்ட இடமாக தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல், பருவநிலை மற்றும் வனத்துறை அறிவித்துள்ளது.

அரிட்டாபட்டியின் சிறப்புகள்:

  • நவம்பர் 22ஆம் தேதி தமிழ்நாடு அரசு மதுரை மாவட்டத்தில் அரிட்டாபட்டி மற்றும் மீனாட்சிபுரம் கிராமங்களில் 193.215 ஹெக்டேர் பரப்பளவை 'அரிட்டாபட்டி பல்லுயிர் பாரம்பரிய தளம்' என 2002ஆம் ஆண்டு உயிரியல் பன்முகத்தன்மை சட்டத்தின்கீழ் அறிவித்தது. இதுவே முதல் பல்லுயிர் பாரம்பரிய தளமாகும்.
    மதுரையில் உள்ள அரிட்டாபட்டி கிராமம் பல்லுயிர் பாரம்பரியம் கொண்ட இடமாக அறிவிப்பு
    மதுரையில் உள்ள அரிட்டாபட்டி கிராமம் பல்லுயிர் பாரம்பரியம் கொண்ட இடமாக அறிவிப்பு
  • அரிட்டாபட்டி கிராமம் ஏழு தரிசு கிரானைட் மலைகளின் சங்கிலித் தொடராகும். இந்த மலைகளை ஆதாரமாகக் கொண்டு 72 ஏரிகள், 200 இயற்கை நீரூற்றுக் குளங்கள் மற்றும் 3 தடுப்பணைகள் உள்ளன.
    மதுரையில் உள்ள அரிட்டாபட்டி கிராமம் பல்லுயிர் பாரம்பரியம் கொண்ட இடமாக அறிவிப்பு
    மதுரையில் உள்ள அரிட்டாபட்டி கிராமம் பல்லுயிர் பாரம்பரியம் கொண்ட இடமாக அறிவிப்பு

    நீர்நிலைகளில் ஒன்றான ஆனைகொண்டான் ஏரி கி.பி.16ஆம் நூற்றாண்டில் பாண்டியர்களின் ஆட்சியில் கட்டப்பட்டது.
    மதுரையில் உள்ள அரிட்டாபட்டி கிராமம் பல்லுயிர் பாரம்பரியம் கொண்ட இடமாக அறிவிப்பு
    மதுரையில் உள்ள அரிட்டாபட்டி கிராமம் பல்லுயிர் பாரம்பரியம் கொண்ட இடமாக அறிவிப்பு
  • அரிட்டாபட்டி கிராமத்தில் உள்ள மலைப்பகுதிகளில் சுமார் 250 பறவை இனங்கள் உள்ளன. இதில் 3 முதன்மை ராப்டார் இனங்கள் லகர் ஃபால்கன் (பால்கோ ஜாகர்), ஷாஹீன் பால்கன் (பால்கோ பெரிக்ரைன்ஸ்), மற்றும் போனெல்லிஸ் ஈகிள் (அக்விலா ஃபேசியாட்டா) மற்றும் வனவிலங்குகள் உள்ளன. இந்திய பாங்கோலின், பைதான் மற்றும் ஸ்லெண்டர் லோரிஸ் ஆகியவையும் உள்ளன.
  • இங்கு பல்வேறு பெருங்கற்கால கட்டமைப்புகள், கி.மு.2ஆம் நூற்றாண்டு தமிழ் பிராமி கல்வெட்டுகள், சமணர் படுக்கைகளும், குடைவரை சிவன்கோவிலும் உள்ளன.
    மதுரையில் உள்ள அரிட்டாபட்டி கிராமம் பல்லுயிர் பாரம்பரியம் கொண்ட இடமாக அறிவிப்பு
    மதுரையில் உள்ள அரிட்டாபட்டி கிராமம் பல்லுயிர் பாரம்பரியம் கொண்ட இடமாக அறிவிப்பு

இதையும் படிங்க:'வரும் 2026-ல் மதுரை எய்ம்ஸ் பணிகள் நிறைவடையும்' - மத்திய அரசு அறிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.