கீழடி அகரத்தில் மீண்டும் உறைகிணறு கண்டெடுப்பு

author img

By

Published : Sep 4, 2021, 5:50 PM IST

another-well-found-in-keezhadi

கீழடி அருகே அகரத்தில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட அகழாய்வின் தொடர்ச்சியாக தற்போது மீண்டும் ஒரு உறைகிணறு கண்டறியப்பட்டுள்ளது.

மதுரை : சிவகங்கையில் உள்ள திருப்புவனம் தாலுகாவில் அமைந்துள்ள கீழடியில் தமிழக தொல்லியல் துறையின் சார்பாக 7ஆம் கட்ட அகழாய்வுகள் நடைபெற்று வருகின்றன. கீழடி அருகேயுள்ள கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய பகுதிகளில் இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அகரம் அகழாய்வில் ஆய்வுப் பணிகளுக்காக எட்டு குழிகள் தோண்டப்பட்டுள்ள நிலையில், அதில் ஒரு குழியில் 15 அடுக்குகள் கொண்ட சுடுமண்ணால் ஆன உறைகிணறு கண்டறியப்பட்டுள்ளது. சென்ற மாதம் 15ஆம் தேதி மூன்று உறைகிணறுகள் கண்டறியப்பட்ட நிலையில் தொடர்ந்து நடைபெற்ற அகழாய்வுகளில் தற்போது 15 அடுக்குகள் கொண்ட உறைகிணறு கண்டறியப்பட்டுள்ளது.

அதைப் போன்று மற்றொரு குழியில் ஒன்றரை சென்டிமீட்டர் ஆழத்தில் வட்ட வடிவிலான சுடுமண்ணால் செய்யப்பட்ட நான்கு அடுக்குகள் கொண்ட உறைகிணறு தென்படத் தொடங்கியுள்ளது. அகரத்தில் நடைபெற்ற முதலாவது அகழ்வாய்வின் போது இருபத்தி ஆறு அடுக்குகள் கொண்ட உறைகிணறு கண்டறியப்பட்டது.

கண்டறியப்பட்ட மற்றொரு உறைகிணறு

மேலும் இங்கே புகைப்பான், சுடு மண் பானைகள், தங்க நாணயம் உள்ளிட்ட ஏராளமான தொல்லியல் பொருட்கள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளன.

இதையும் படிங்க : திருக்கோயில் பாதுகாப்பு படையினரின் மாத தொகுப்பூதியம் ரூ. 5 ஆயிரம் உயர்வு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.