ETV Bharat / state

“தெர்மாகோல் பற்றி பேசி நம்மளத்தான் ஓட்டுறாங்க” - செல்லூர் ராஜு வேதனை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 18, 2023, 2:04 PM IST

“தெர்மாகோல் பற்றி பேசி நம்மளத்தான் ஓட்டுறாங்க” - செல்லூர் ராஜூ வேதனை!
“தெர்மாகோல் பற்றி பேசி நம்மளத்தான் ஓட்டுறாங்க” - செல்லூர் ராஜூ வேதனை!

Sellur raju on thermocoal issue: “சட்டமன்றத்தில் மக்கள் பிரச்னை குறித்து ஏதாவது கேள்வி கேட்டால், தெர்மாகோல் பற்றி பேசி நம்மளத்தான் ஓட்டுறாங்க” என மதுரையில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

மதுரை: அதிமுகவின் 52ஆம் ஆண்டு துவக்க விழாவையொட்டி, மதுரை மாவட்ட அதிமுகவின் சார்பில் பழங்காநத்தம் பகுதியில் முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான செல்லூர் ராஜூ தலைமையில் நேற்று (அக்.17) அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் செல்லூர் ராஜூ பேசுகையில், “குண்டுக்கே டாட்டா காட்டியவர் எம்.ஜிஆர். சதுரங்க வேட்டை திரைப்படம் போல் முதல்வர் நம்மை ஏமாற்றுக்கிறார். வாரிசுக்கு கட்சியில் இடமுண்டா என்ற கேள்விக்கு, இந்த கழகம் சங்கர மடம் கிடையாது என்கிறார்.

பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து 25 லட்சம் மக்களை தெருவில் விட்டுவிட்டார்கள். அப்போதே எம்.ஜி.ஆர்., முதியோர் பென்சன் நூறு ரூபாய் வழங்கினார். அவர் கொண்டு வந்த திட்டம், இப்போதும் இருக்கிறது. ஜெயலலிதாவுக்கு கல்யாணம் ஆகவில்லை. ஆனால், அவர் ஆட்சிக்கு வந்ததும் கொண்டு வந்த திட்டம்தான் தொட்டில் குழந்தை திட்டம்.

ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை எல்லாம் நிறுத்தினீர்களே முதல்வரே, இது நியாயமா” என கேள்வி எழுப்பினார். மேலும் அவர் பேசுகையில், “கொள்கை என்பது வேஷ்டி. கூட்டணி என்பது தோளில் கிடக்கும் துண்டு. எப்ப வேணாலும் தூக்கி போடுவோம். அண்ணா வளர்த்த கட்சியை இன்று குடும்ப கட்சியாக மாற்றி விட்டது, திமுக.

இதையும் படிங்க: "ஜனவரி முதல் தமிழகம் முழுவதும் கள் இறக்கப்படும்" - தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி அறிவிப்பு

திமுக ஆட்சிக்கு வந்ததும் மின்கட்டணம் உயர்வு. அதனால் வீட்டு வாடகையை உயர்த்தி விட்டார்கள். இந்த ஆட்சியில் கமிஷன், கரப்சன்தான். பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உண்மையைச் சொன்னார். இன்று பல்லைப் பிடுங்கி இருக்கின்ற இடம் தெரியாமல் இருக்கிறார்.

மதுரைக்கு எந்த திட்டமும் கொண்டு வரவே இல்லை. அமைச்சர்கள் ராஜினாமா செய்வதே நல்லது. சட்டமன்றத்தில் மக்கள் பிரச்னை குறித்து ஏதாவது கேள்வி கேட்டால், தெர்மாகோல் பற்றி பேசி நம்மளத்தான் ஓட்டுறாங்க. குடிநீர் பற்றி சட்டமன்றத்தில் பேசினால், பெத்தானியாபுரம் பகுதியில் நான்கு குடிநீர் தொட்டிகள் கட்டி உள்ளதாக கூறுகின்றனர்.

நான்கு வார்டுக்கு மட்டும் குடிநீர் தொட்டி போதுமா? நூறு வார்டுக்கும் தூய குடிநீர் கிடைக்க வேண்டாமா? அதற்குத்தான் 1,250 கோடி ரூபாயில் முல்லைப் பெரியாறு கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வந்தவர், எடப்பாடி பழனிசாமி” என பேசினார்.

இதையும் படிங்க: LCU-வில் லியோ இணைவது உறுதி? - உதயநிதி ஸ்டாலினின் சூசகமான ட்வீட்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.