கிருஷ்ணகிரியிலேயே முதல் "எருது விடும் விழா": 300க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு!

author img

By

Published : Jan 15, 2023, 5:56 PM IST

கிருஷ்ணகிரிலேயே "முதல் எருது விடும் விழா"

கிருஷ்ணகிரி மாவட்டத்திலேயே முதல் எருது விடும் விழா ஓசூர் அடுத்த ஆருப்பள்ளி கிராமத்தில் இன்று நடைபெற்றது. 300க்கும் அதிகமான காளைகள், பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் பங்கேற்றனர்.

கிருஷ்ணகிரியிலேயே முதல் "எருது விடும் விழா": 300க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு!

கிருஷ்ணகிரி: மாட்டுப் பொங்கலன்று ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, ரேக்ளா பந்தயம் போன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிரபலமானது "எருது விடும் விழா". இந்த விழாவில் வேகமாக ஓடக்கூடிய காளைகள் மட்டுமே பங்கேற்கும். மாடுகளின் கொம்புகளில் அலங்கரிக்கப்பட்ட வண்ண தடுக்கைகள் கட்டப்பட்டு, இளைஞர்கள் சூழ்ந்திருக்க அவர்கள் மத்தியில் அவிழ்த்துவிடப்படும்.

இருபுறங்களில் மரங்களால் தடுப்புகள் அமைக்கப்பட்டு தோரணம் கட்டும் பகுதியிலிருந்து சில மீட்டர்கள் தூரத்திற்கு இடைப்பட்ட பகுதியில் தான் இளைஞர்கள், மாட்டினை அடக்க வேண்டும். சீறிபாயும் காளைகளை ஒருவரோ அல்லது கூட்டாகவோ பிடிக்கலாம். அப்படி பிடிப்போருக்கு மாட்டு கொம்பில் இருக்கும் தடுக்கை மட்டுமே பரிசாக எடுத்துக்கொள்ளலாம். மற்ற பரிசுகள் காளை உரிமையாளர், மாடு பிடி வீரர்களுக்கோ வழங்கப்படாது.

மாட்டுக்கொம்பில் கட்டப்படும் தடுக்கைகளின் மதிப்பு 5 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை இருக்கும். மாட்டின் உரிமையாளர்கள் தங்களது மாட்டினை பிடிப்போருக்கு ரொக்கப்பணத்தைப் பரிசாக அறிவிப்பதும் உண்டு. ஒரு மாட்டினை பலமுறையும் அவிழ்த்துவிடலாம். நூற்றாண்டுகளுக்கும் மேலாக எருதுவிடும் விழாக்கள் பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது.

ஜனவரி மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை வெவ்வேறு பகுதிகளில் பிரமாண்டமாக இவ்விழா நடத்தப்படும். கிருஷ்ணகிரி மாவட்டத்திலேயே முதல் எருதுவிடும் விழா, ஓசூர் அடுத்த சூளகிரி அருகே உள்ள ஆருப்பள்ளி கிராமத்தில் இன்று நடைபெற்றது. திமுகவின் இளைஞரணி மாநில துணை செயலாளர் சீனிவாசன் எருதுவிடும் விழாவினை தொடங்கி வைத்தார்.

மாவட்டத்தின் சூளகிரி, பேரிகை, பாகலூர், உத்தனப்பள்ளி, மேலுமலை உள்ளிட்டப் பகுதிகளிலிருந்து 300க்கும் அதிகமான காளை மாடுகள் அழைத்துவரப்பட்டு பங்கேற்றிருந்தன. காளைகளை அடக்க இளைஞர் கூட்டத்திற்கு இடையே கடும் போட்டியும், சவாலாகவும் இருந்து மல்லுக்கட்டினர். பிற பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் பங்கேற்றிருந்தனர். மேலும் மாடுகள் முட்டியதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதையும் படிங்க: "அண்ணாமலை ஒரு கோமாளி": அமைச்சர் ராமச்சந்திரன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.