பொங்கல் பரிசுக்காக பல மணி நேரம் காத்திருப்பு - கிருஷ்ணகிரி மக்கள் தர்ணா

author img

By

Published : Jan 9, 2023, 6:42 PM IST

பொங்கல் பரிசுக்காக பல மணி நேரம் காத்திருந்த மக்கள்: தர்ணா போராட்டம்

கிருஷ்ணகிரியில் பொங்கல் பரிசு தொகுப்புக்காக நியாய விலைக் கடையின் முன்பு பல மணி நேரமாக காத்திருந்த பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொங்கல் பரிசுக்காக பல மணி நேரம் காத்திருப்பு - கிருஷ்ணகிரி மக்கள் தர்ணா

கிருஷ்ணகிரி: தேன்கனிக்கோட்டை அஞ்செட்டி சாலையில் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே 2ஆம் நம்பர் நியாய விலைக் கடை உள்ளது. இந்த கடையில் இன்று காலை 9 மணிக்கு பொங்கல் தொகுப்புகளை வாங்க குடும்ப அட்டைதாரர்கள் சென்றுள்ளனர்.

ஆனால், காத்திருந்த அவர்களிடம் கடையின் விற்பனையாளர் சிறிது நேரத்தில் தொகுப்புகளை வழங்குவதாக கூறியுள்ளார். ஒவ்வொரு முறை பொதுமக்கள் கேட்டபோதும் இன்னும் அரை மணி நேரத்தில் வழங்கி விடுகிறேன் என்று; அவர்களை 3 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருக்க வைத்துள்ளார். இதனால் கடைக்கு பொங்கல் தொகுப்பு வாங்க வந்த நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் ஆத்திரமடைந்து கடையின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: "யப்பா!... வாங்க போலாமா" கூட்டம் கூட்டமாக வந்த யானைகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.