ETV Bharat / state

நாட்டின மீன்கள் பெருக்கும் திட்டம்: 1.4 லட்சம் மீன்கள் தென்பெண்ணை ஆற்றில் விடப்பட்டது!

author img

By

Published : Jan 3, 2023, 8:20 PM IST

மீன்களை பெருக்க 1.4 லட்சம் மீன்கள் தென்பென்னையில் விட்டப்பட்டன!
மீன்களை பெருக்க 1.4 லட்சம் மீன்கள் தென்பென்னையில் விட்டப்பட்டன!

நாட்டின மீன்களை பெருக்கும் விதமாக, தென்பெண்ணை ஆற்றில் 1 லட்சத்து 40 ஆயிரம் நாட்டின மீன் குஞ்சுகளை விட்டு, அத்திட்டத்தை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

நாட்டின மீன்கள் பெருக்கும் திட்டம்: 1.4 லட்சம் மீன்கள் தென்பெண்ணை ஆற்றில் விடப்பட்டது!

கிருஷ்ணகிரி: தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் மத்திய அரசின் தேசிய மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ஆறுகளில் நாட்டு இன நன்னீர் மீன் குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த பாத்தகோட்டா கிராமம் வழியாக செல்லும் தென்பெண்ணை ஆற்றில் 1 லட்சத்து 40 ஆயிரம் நாட்டு இன மீன் குஞ்சுகள் விடப்பட்டது.

குறிப்பாக அழிவின் நிலையில் உள்ள நாட்டின மீன் குஞ்சுகளான கட்லா, ரோகு, மிர்கால், சேல் கெண்டை, கல்பாசு போன்ற நாட்டின மீன் குஞ்சுகள் விடும் பணி தென்பெண்ணை ஆற்றில் நடைபெற்றது. இந்த திட்டத்தின் மூலம் ஆற்றில் நாட்டின் மீன் உற்பத்தி ஆண்டிற்கு 20 டன் மீன்கள் கூடுதலாக உற்பத்தியாவதற்கு வாய்ப்பு உள்ளது.

இப்பகுதியில் மீன்பிடித் தொழில் செய்யும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், பொது மக்களுக்கு நாட்டின மீன்கள் கிடைக்கப் பெறுவதற்கு வழி வகுப்போடு, அழிவின் விளிம்பு நிலையில் உள்ள நாட்டின மீன்களை பாதுகாப்பதற்காகவும், இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

மேலும் 70 கி.மீ. தூரம் வரை பாய்ந்து செல்லும் தென்பெண்ணை ஆற்றில் ஒரு கி.மீ.தூரத்திற்கு 2000 நாட்டின மீன் குஞ்சுகள் என 70 கி.மீட்டருக்கு ஒரு லட்சத்து 40 ஆயிரம் நாட்டின மீன் குஞ்சுகள் விடப்பட்டன. மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை தாங்கி ஆற்றில் மீன் குஞ்சுகளை விடும் பணியைத் தொடங்கி வைத்தார்.

இதையும் படிங்க: ரங்கராஜ் பாண்டேவின் தந்தை மறைவு: ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.