ETV Bharat / state

தண்டவாளத்தில் படுத்து முதியவர் தற்கொலை!

author img

By

Published : Dec 21, 2019, 6:57 PM IST

old-man-suicide-in-hosur-railway-track
old-man-suicide-in-hosur-railway-track

கிருஷ்ணகிரி: ஓசூரில் ரயில் தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்துகொண்ட முதியவரின் உடலைக் கைப்பற்றி அவர் குறித்து ரயில்வே காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் 60 வயது மதிக்கத்தக்க முதியவரின் தலை துண்டான நிலையில் ரயில்வே காவல் துறை அவரின் உடலைக் கைப்பற்றியுள்ளனர். தற்கொலை செய்துகொண்டு முதியவர் யார் என்பது குறித்து விசாரணையை மேற்கொண்டுவருகின்றனர்.

கோயம்புத்தூரிலிருந்து மும்பை சென்ற குர்லா எக்ஸ்பிரஸ் (11014) இரண்டரை மணியளவில் ஓசூர் ரயில்வே நிலையத்திற்கு வந்து மீண்டும் புறப்பட்டது. அப்போது சில மீட்டர்கள் தூரத்திலேயே ஒருவர் ரயில் தண்டவாளத்தில் படுத்திருந்ததாகவும் ரயிலை நிறுத்த முடியாததால் படுத்திருந்தவர் மீது ரயில் ஏறி அவர் உயிரிழந்துவிட்டதாகவும் ரயிலை இயக்கிய ஓட்டுநர் ஓசூர் ரயில்வே காவல் துறையினருக்குத் தகவல் அளித்துள்ளார்.

தண்டவாளத்தில் படுத்து முதியவர் தற்கொலை

தகவலறிந்து வந்த ஓசூர் ரயில்வே காவல் துறையினர், உயிரிழந்தவர் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் என்றும் தற்கொலை செய்துகொண்டிருப்பதையும் உறுதி செய்தனர். இதையடுத்து முதியவரின் உடலை மீட்டு தற்கொலை செய்துகொண்ட முதியவர் யார்? எதற்காக தற்கொலை செய்துகொண்டார் உள்ளிட்ட விவரங்கள் குறித்த விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இதையும் படிங்க: கடலூரில் காவல் துணைஆய்வாளர் மகன் தூக்கிட்டு தற்கொலை!

Intro:ஓசூரில் இரயில் தண்டவாளத்தில் தலை துண்டான நிலையில் தற்கொலை செய்துகொண்ட முதியவர்: உடலை கைப்பற்றி இரயில்வே போலீஸ் விசாரணை.Body:ஓசூரில் இரயில் தண்டவாளத்தில் தலை துண்டான நிலையில் தற்கொலை செய்துகொண்ட முதியவர்: உடலை கைப்பற்றி இரயில்வே போலீஸ் விசாரணை.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் 60 வயது மதிக்கதக்க முதியவரின் தலை துண்டான நிலையில் உடலை மீட்ட இரயில்வே போலிசார், உயிரிழந்தவர் குறித்து விசாரணையை மேற்க்கொண்டு வருகின்றனர்.

கோயம்புத்தூரிலிருந்து மும்பை கிளம்பிய குர்லா எக்ஸ்பிரஸ் (11014) இரண்டரை மணியளவில் ஒசூர் இரயில்வே நிலையத்திற்கு வந்து மீண்டும் புறப்பட்டபோது சில மீட்டர்கள் தூரத்திலேயே ஒருவர் இரயில் தண்டவாளத்தில் படுத்திருந்ததாகவும், இரயிலை நிறுத்த முடியாததால் படுத்திருந்தவர் மீது ரயில் ஏறி அவர் இறந்துவிட்டதாக இரயிலை இயக்கிய ஓட்டுநர் ஓசூர் இரயில்வே போலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

தகவலறிந்து வந்த ஒசூர் இரயில்வே போலீசார் 10 நிமிடங்கள் தாமதமாக ரயில் புறப்பட்ட பின்பு, உயிரிழந்தவர் 60 வயது மதிக்கதக்க முதியவர் என்றும், தற்கொலை செய்துக்கொண்டிருப்பதை உறுதி செய்த இரயில்வே போலிசார் உடலை மீட்டு உயிரிழந்த முதியவர் யார்? எதற்காக தற்கொலை செய்துக்கொண்டார் உள்ளிட்ட விசாரணையை தொடங்கி உள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.