இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மார்கண்டேய நதியின் குறுக்கே கர்நாடகா அரசு அணை கட்டியுள்ளது பற்றி சில நாளேடுகளில் செய்திகள் வெளியாகியுள்ளன.
2017 இல் மத்திய நீர்வள குழுமத்தின் பொறியாளர்கள் ஆய்வு செய்த போது குடிநீர் தேவைக்காகவும், நில நீரை செறிவூட்டுவதற்கும் சுமார் 0.5 டிஎம்சி கொள்ளளவுள்ள ஒரு அணையை கட்டி இருப்பதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. 2019இல் அணை கட்டி முடிந்து விட்டதாக கர்நாடக அரசு கூறியுள்ளது.
இதனை தமிழ்நாடு அரசு தொடர்ந்து எதிர்த்து வந்துள்ளது. இது தொடர்பான வழக்கில் நடுவர் மன்றம் அமைக்க உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது. நடுவர் மன்றத்தை அமைக்க தமிழ்நாடு அரசு தொடர்ந்து ஒன்றிய அரசை வலியுறுத்தி வருகிறது.
இதுதொடர்பாக ஜூன் 29 ஆம் தேதி ஒன்றிய ஜல் சக்தி அமைச்சகத்துக்கு அனுப்பிய கடிதத்தில் நடுவர் மன்றம் அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த அணையின் காரணமாக கிருஷ்ணகிரி தாலுக்காவில் மார்கண்டேய நதியின் குறுக்கே 4 சிறு அணைகள் மூலம் பாசன வசதி பெறும 870 ஹெக்டேர் பாதிக்கப்படும்.
இந்த பிரச்னைக்கு நடுவர் மன்றத்தின் மூலம தீர்வு காணப்படும். தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்ட உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : அம்மா உணவகத்தில் சத்துணவு வழங்கும் திட்டம்: அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு