ETV Bharat / state

ஓசூர் அருகே வியாபாரி வெட்டிக் கொலை

author img

By

Published : Dec 19, 2020, 12:41 PM IST

man-killed
man-killed

கிருஷ்ணகிரி : ஓசூர் அருகே புதினா வியாபாரியை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற அடையாளம் தெரியாத கும்பலை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சூளகிரி அடுத்த தொட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜப்பா. புதினா வியாபாரம் செய்துவருகிறார். இவர் இன்று காலை (டிசம்பர் 19) வழக்கம்போல் இருசக்கர வாகனத்தில் மார்க்கெட்டுக்கு சென்றுகொண்டிருந்தார்.

அப்போது ஆத்துமேடு என்ற பகுதியில் அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று ராஜப்பாவைச் சுற்றிவளைத்து ஓட ஓட விரட்டி வெட்டியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த ராஜப்பா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து அப்பகுதி மக்கள் சூளகிரி காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் ராஜப்பா உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக ஓசூர் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் சொத்து தகராறா அல்லது தொழில் போட்டி காரணமாக கொலை செய்தனரா எனப் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்திவருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.