ETV Bharat / state

லாரி சக்கரத்தில் சிக்கி உயிர்தப்பிய மூவர் - பதறவைக்கும் சிசிடிவி காட்சி

author img

By

Published : Sep 25, 2021, 3:32 PM IST

Updated : Sep 25, 2021, 4:45 PM IST

hosur-lorry-accident-cctv-footage
லாரி சக்கரத்தில் சிக்கி உயிர்தப்பிய மூவர்

ஓசூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற மூவர் லாரியின் சக்கரத்தில் சிக்கி, லாரி டிரைவரின் சமயோசிதத்தால் உயிர்தப்பியுள்ளனர்.

கிருஷ்ணகிரி: ஓசூர் பாகலூர் பெரியார் நகரைச் சேர்ந்தவர் டேனியல் ரூபன். இவர், பாகலூர் - ஓசூர் செல்லும் நெடுஞ்சாலையில் இரண்டு பெண்களை ஏற்றிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது, அவர்களது முன்னாள் சென்ற டாரஸ் லாரியை முந்திச்செல்ல டேனியல் முயன்றுள்ளார். சாலையின் ஓரத்தில் லாரி சென்றுகொண்டிருந்த போது டேனியல் நிலைதடுமாறினார். இதில், இருசக்கர வாகனத்தில் வந்த மூவரும் லாரியின் முன்சக்கரத்தில் விழுந்தனர்.

லாரி சக்கரத்தில் சிக்கி உயிர்தப்பிய மூவர்

இதனைக் கண்டு சுதாரித்த லாரி ஓட்டுநர், உடனடியாக பிரேக் அடித்தார். இருந்தபோதிலும், லாரியின் சக்கரத்தில் சிக்கிக்கொண்ட மூவரும் சிறிது தூரம்வரை இழுத்துச் செல்லப்பட்டனர்.

மருத்துவமனையில் சிகிச்சை

பின்னர், லாரி நின்றவுடன் லாரி ஓட்டுநர் சக்கரத்தில் சிக்கியிருந்த மூவரையும் மீட்டார். இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்தவர்களுக்கு முதலுதவி செய்ததுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.

இதையும் படிங்க: சென்னையில் சொகுசு கார் விபத்து... எதிர்பாராத திருப்பம் - காவல் துறை விசாரணை

Last Updated :Sep 25, 2021, 4:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.