இரு தரப்பினருக்கு இடையே மோதல்: ஒருவர் கொலை

author img

By

Published : Jun 30, 2021, 3:23 PM IST

7 பேர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

ஒசூர் அருகே இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இளைஞர் மதுப்பாட்டிலால் குத்திக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேர் வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி: ஒசூர் அடுத்த மதகொண்டப்பள்ளி கிராமத்தின் பின்புறமாக ஞாயிற்றுக்கிழமை இரவு இரண்டு சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இருபிரிவாகத் தனித்தனியாக அமர்ந்து மது அருந்தி வந்துள்ளனர்.

அப்போது இருதரப்பினருக்கு இடையே வாய்தகராறு ஏற்பட்டு கைக்கலப்பாக மாறி உள்ளது. அப்போது குடிபோதையில் மதுப்பாட்டில்களில் குத்தியதில் 3 இளைஞர்கள் படுகாயமடைந்து ஒசூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டுவரும் வழியில் சசிகுமார் (25) என்ற இளைஞர் உயிரிழந்தார். மேலும் இரண்டு இளைஞர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

சசிகுமார் பலத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில், எதிர் தரப்பைச் சேர்ந்த 7 பேரை தளி காவல் துறையினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தநிலையில் பிரசன்னா, முரளி, ராஜசேகர், சண்முகம், கிரீஷ், சசிதர், மோகன் ஆகிய 7 பேரை கைதுசெய்து ஒசூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.


நீதிபதி 7 பேரையும் ஒசூர் கிளை சிறையில் அடைக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவர்களை சிறையில் அடைத்தனா்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.