ETV Bharat / state

கரூரில் விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை

author img

By

Published : May 17, 2021, 10:12 AM IST

women suicide
பெண் தற்கொலை

கரூர்: பாலசமுத்திரப்பட்டியில் நீரழிவு நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி ஒருவர், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கரூர் மாவட்டம் பாலசமுத்திரப்பட்டி அருகே அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மனைவி பெரியயாக்கால்(69), இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக நீரழிவு நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில், மன உளைச்சலுக்கு ஆளாகி விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

வீட்டில் மயங்கிய நிலையில் இருந்த அவரை, திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து தோகைமலை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.