இலங்கை அகதி பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. விஏஓ கைது...

author img

By

Published : Oct 3, 2022, 12:48 PM IST

Updated : Oct 3, 2022, 12:55 PM IST

Etv Bharatஇலங்கை அகதி பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை -  விஏஓ போக்சோவில் கைது

கரூரில் இலங்கை தமிழர் முகாமில் இருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கிராம நிர்வாக அலுவலர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட சிவாயம் வடக்கு பகுதி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் அன்புராஜ்(36). இவர் இரும்பூதிரிப்பட்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் திருமணமான பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

வன்புணர்வு செய்யவும் முயற்சித்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் அன்புராஜ் நேற்றிரவு (அக்.2) கைது செய்யப்பட்டார்.

இதையும் படிங்க:காவல் நிலையத்தில் போலீசையே மிரட்டிய சரித்திரப்பதிவேடு குற்றவாளியின் கூட்டாளி

Last Updated :Oct 3, 2022, 12:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.