ETV Bharat / state

திமுகவினரின் சுவரோவியத்தில் மாட்டு சாணம் வீச்சு - கரூரில் பாஜகவினர் 4 பேர் கைது

author img

By

Published : Nov 2, 2022, 6:28 PM IST

Updated : Nov 2, 2022, 6:47 PM IST

Etv Bharat
Etv Bharat

கரூரில் திமுகவினர் வரைந்த சுவரோவியங்கள் மீது பாஜக, இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர்கள் மாட்டு சாணத்தை வீசிய விவகாரத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்: கரூரில் தமிழ்நாடு பாஜக தலைவர் கைது செய்யப்பட்டதைக்கண்டித்து திமுக அலுவலகத்தின் மீது கல் வீசி எறிந்தும்; சாணத்தைக் கொண்டு திமுக தலைவர்கள் படத்தை அழித்தும் இருக்கும் சம்பவம் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பாஜக தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டதைக்கண்டித்து நேற்று இரவு அக்கட்சியினர் பல இடங்களில் நடத்திய போராட்டத்தை போலீசார் தடுத்தனர். இதனிடையே இன்று (நவ.2) அதிகாலை கரூர் புகழூர் வேலாயுதம்பாளையத்தில் உள்ள திமுக நகர அலுவலகத்திற்குள் கற்களை வீசியும், அலுவலகத்தில் உள்ள விளம்பரப் பதாகைகளை கிழித்தும், பாஜகவினர் சிலர் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

மேலும் கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையின் மேம்பாலத்தில் வரையப்பட்டிருந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, அமைச்சர் செந்தில் பாலாஜி, உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ ஆகியோர் படங்கள் மீது மாட்டு சாணத்தை சில அடையாளம் தெரியாத நபர்கள் பூசியுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த திமுகவினர் பலரும் காலை முதல் அங்கு கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனைத்தொடர்ந்து, திமுக கட்சி அலுவலகப்பெயர் பலகையை சேதப்படுத்தியும், மேம்பாலம் பகுதியில் வரையப்பட்டிருந்த தலைவர்களின் படங்களில் சாணி வீசியவர்களைக்கண்டித்தும் புகழூர் நகர திமுக தலைவர் நொய்யல் சேகர் தலைமையில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திமுகவினரின் சுவரோவியத்தில் மாட்டு சாணம்..
திமுகவினரின் சுவரோவியத்தில் மாட்டு சாணம்..

இதனிடையே புகழூர், பாலத்துறை அருகே டீக்கடை முன்பு, சந்தேகப்படும்படி இருசக்கர வாகனத்துடன் நின்றவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் வேலாயுதம்பாளையம் காந்தி நகரைச்சேர்ந்த பிரதீப், அண்ணா நகரைச் சேர்ந்த சுகுந்தன் ஆகியோர் இச்செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.

அவர்கள் இருவரும் பாஜக, இந்து முன்னணி உறுப்பினர்கள் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக மேலும், இருவர் என மொத்தம் நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் மாவட்டம் முழுவதும் உள்ள திமுக அலுவலகங்களுக்கு கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவின்பெயரில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அண்ணாமலை குறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி, சில தினங்களுக்கு முன்பு அளித்த பேட்டி ஒன்றை அப்பகுதியைச்சேர்ந்த திமுகவினர் அதிகமாக சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்ததால் ஆத்திரமடைந்த பாஜகவின் தொழில்நுட்பப்பிரிவினர் பதிலடியாக இத்தகைய சம்பவங்களில் ஈடுபட்டதாகக்கூறப்படுகிறது.

திமுகவினரின் சுவரோவியத்தில் மாட்டு சாணம் வீச்சு - கரூரில் பாஜகவினர் 4 பேர் கைது

இதையும் படிங்க: 'அண்ணாமலை ஒரு அரசியல் கோமாளி' - அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சனம்

Last Updated :Nov 2, 2022, 6:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.