ETV Bharat / state

ஸ்டாலினின் ஆணைக்கிணங்க புலியூர் பேரூராட்சித் தலைவர் புவனேஸ்வரி ராஜினாமா!

author img

By

Published : Mar 8, 2022, 5:23 PM IST

புலியூர் பேரூராட்சி தலைவர்
புலியூர் பேரூராட்சி தலைவர்

கரூர் மாவட்டம், புலியூர் பேரூராட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்ட திமுக 3ஆவது வார்டு உறுப்பினர் புவனேஸ்வரி புலியூர் பேரூராட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

கரூர்: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்.19ஆம் தேதி நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் பிப்.22ஆம்தேதி எண்ணப்பட்டன. அதைத் தொடர்ந்து மாநகராட்சி மேயர், துணை மேயர், நகர்மன்ற தலைவர், துணை தலைவர், பேரூராட்சி தலைவர், துணை தலைவர் பதவிகளுக்கு மார்ச் 4ஆம் தேதி மறைமுகத் தேர்தல் நடைபெற்றது.

கரூர் மாவட்டம், புலியூர் பேரூராட்சி தலைவர் பதவி திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், இதில் திமுகவைச் சேர்ந்த 3ஆவது வார்டு உறுப்பினர் புவனேஸ்வரி போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இதையடுத்து, திமுக தலைமை அறிவுறுத்தலின்பேரில் பேரூராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்ட புவனேஸ்வரி இன்று (மார்ச்.8) மதியம் 12 மணியளவில் தனது ராஜினாமா கடிதத்தை புலியூர் பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணியத்திடம் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 1ஆவது வார்டில் வெற்றி பெற்றுள்ள கலாராணி புலியூர் பேரூராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட உள்ளார்.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் மறைமுகத் தேர்தல் தள்ளிவைக்கப்பட்ட இடங்களுக்கு தேர்தல் தேதி அறிவிக்கும்போது, புலியூர் பேரூராட்சி தலைவர் பதவி தேர்தலும் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: Women's Day - 2022: இது ஒரு நாள் முதல்வன் அல்ல; ஒரு நாள் போலீஸ் - கல்லூரி மாணவியின் புதிய அவதாரம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.