ETV Bharat / state

பொங்கல் பண்டிகை; குமரியில் சுற்றுலாப்படகுகள் இயக்கப்படும் நேரம் நீட்டிப்பு

author img

By

Published : Jan 4, 2023, 7:12 PM IST

கன்னியாகுமரியில் சுற்றுலா படகுகள் இயக்கப்படும் நேரம் நீட்டிப்பு
கன்னியாகுமரியில் சுற்றுலா படகுகள் இயக்கப்படும் நேரம் நீட்டிப்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரியில், சுற்றுலாப் படகுகள் இயக்கம், 4 மணி நேரம் கூடுதலாக நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகை; குமரியில் சுற்றுலாப்படகுகள் இயக்கப்படும் நேரம் நீட்டிப்பு

கன்னியாகுமரி: சர்வதேச சுற்றுலா மையமான கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலானவர், கடல் நடுவே உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயரம் கொண்ட திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை சுற்றுலாப் படகுகளில் சென்று பார்வையிடுவதற்கு அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் பண்டிகை காலம் மற்றும் விடுமுறை காலங்களில் சுற்றுலா படகுகளில் கூட்டம் அதிகமாக இருக்கும். இதற்காக பொதிகை, குகன், விவேகானந்தா என்ற மூன்று சுற்றுலா படகுகள், தினசரி காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இயக்கப்படுகின்றன. இந்தச் சூழலில் கடந்த ஜூன் மாதம் 6ஆம் தேதி முதல் திருவள்ளுவர் சிலையினை பராமரிக்கும் பணிகள் நடைபெற்று வந்ததால், சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில் பணிகள் தற்போது நிறைவடைந்ததால் வரும் பொங்கல் பண்டிகையினை முன்னிட்டு, சுற்றுலா பயணிகளின் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என்பதால் தினசரி காலை முதல் மாலை வரை 8 மணி நேரம் இயக்கப்பட்டு வந்த படகுகள், சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக, சுற்றுலாப் படகுகளின் இயக்கம் தினசரி 4 மணி நேரம் கூடுதலாக நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் 15ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை மூன்று நாட்கள் மட்டும் இந்த சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: பொங்கல் பண்டிகைக்கு 16,932 சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.