ETV Bharat / state

மதிய உணவு சாப்பிட்ட மாணவிகள் 26 பேருக்கு வாந்தி, மயக்கம்: மருத்துவமனையில் அனுமதி!

author img

By

Published : Jul 21, 2022, 7:53 PM IST

மதிய உணவு சாப்பிட்ட  மாணவிகள் 26 பேருக்கு வாந்தி, மயக்கம் : மருத்துவமனையில் அனுமதி
மதிய உணவு சாப்பிட்ட மாணவிகள் 26 பேருக்கு வாந்தி, மயக்கம் : மருத்துவமனையில் அனுமதி

நாகர்கோவிலில் உள்ள கவிமணி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 26 பேர் வாந்தி, மயக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி: நாகர்கோவிலில் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை நினைவு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 1300-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு பயின்று வரும் பிள்ளைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டுள்ளது. அதில் சோறு, பருப்பு, குழம்பு மற்றும் முட்டை பரிமாறப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் 6,7 மற்றும் 8ஆம் வகுப்புகளைச்சேர்ந்த மாணவிகள் சிலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இத்தகவல் மாநகராட்சி நிர்வாகத்திற்கும் சுகாதாரத்துறைக்கும் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து ஆம்புலன்ஸ் உதவியுடன் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு 26 மாணவிகளும் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

மீதமுள்ள மாணவிகளுக்கு பள்ளி வளாகத்தில் சுகாதாரத்துறையினர் பரிசோதனை மேற்கொண்டனர். சோர்வடைந்து காணப்பட்ட மாணவிகளுக்கு முதலுதவி செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து பள்ளியில் மாணவிகள், அவர்களது பெற்றோர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மதிய உணவு சாப்பிட்ட மாணவிகள் 26 பேருக்கு வாந்தி, மயக்கம்: மருத்துவமனையில் அனுமதி!

மருத்துவமனையில் உள்ள மாணவிகளை மாவட்ட ஆட்சியர் அரவிந்த், மாநகராட்சி மேயர் மகேஷ் , அமைச்சர் மனோ தங்கராஜ் உள்ளட்டோர் நேரில் பார்த்து விசாரித்தனர்.

இதையும் படிங்க:கடந்த ஆண்டை விட 25,000 ஏக்கர் குறுவை பயிர் நடவு - அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தகவல்!

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.