ETV Bharat / state

'ரயில்களில் நடைபெறும் குற்றச் சம்பவங்கள் 40 விழுக்காடாக குறைந்துள்ளது'

author img

By

Published : Sep 17, 2019, 4:57 PM IST

தென்னக ரயில்வே பொது மேலாளர் ராகுல் ஜெயின் பேட்டி

கன்னியாகுமரி: தென்னக ரயில்வேயில் ஓடும் ரயில்களில் நடைபெறும் குற்றச் சம்பவங்கள் தற்போது 40 விழுக்காடாக குறைந்துள்ளது என தென்னக ரயில்வே பொது மேலாளர் ராகுல் ஜெயின் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி ரயில் நிலையத்தை தென்னக ரயில்வே பொதுமேலாளர் ராகுல் ஜெயின், ரயில்வே பணியாளர்கள், விவேகானந்தா கல்லூரி மாணவ மாணவிகள் இணைந்து தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மேலும் கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் சுகாதாரம் பாதுகாப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து பொதுமேலாளர் ராகுல் ஜெயின் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் நடந்த தூய்மைப்பணி

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தென்னிந்தியாவில் முக்கிய ரயில் நிலையமாக விளங்கும் கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் ஏற்கனவே நான்கு நடைமேடைகள் உள்ள நிலையில் மேலும் இரண்டு நடைமேடைகள் அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்றுவருகின்றன.

தென்னக ரயில்வேயில் ஓடும் ரயில்களில் நடைபெறும் குற்றச் சம்பவங்கள் தற்போது 40 விழுக்காடாக குறைந்துள்ளது. மேலும் பயணிகளுக்கு போதிய பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்த ரயில்வே காவல் துறையினர் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.

Intro:தென்னக ரயில்வேயில் ஓடும் ரயில்களில் நடைபெறும் குற்ற சம்பவங்கள் தற்போது 40 சதவீதமாக குறைந்துள்ளது பயணிகளுக்கு போதிய பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்த ரயில்வே போலீசார் மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என தென்னக ரயில்வே பொது மேலாளர் ராகுல் ஜெயின் கன்னியாகுமரியில் பேட்டி.


Body:தென்னக ரயில்வேயில் ஓடும் ரயில்களில் நடைபெறும் குற்ற சம்பவங்கள் தற்போது 40 சதவீதமாக குறைந்துள்ளது பயணிகளுக்கு போதிய பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்த ரயில்வே போலீசார் மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என தென்னக ரயில்வே பொது மேலாளர் ராகுல் ஜெயின் கன்னியாகுமரியில் பேட்டி.

கன்னியாகுமரி ரயில் நிலையத்தை தென்னக ரயில்வே பொது மேலாளர் ராகுல் ஜெயின் மற்றும் ரயில்வே பணியாளர்கள் விவேகானந்தா கல்லூரி மாணவ மாணவிகள் இணைந்து தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மேலும் கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் சுகாதாரம் பாதுகாப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து பொது மேலாளர் ராகுல் ஜெயின் நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறுகையில்:- தென்னிந்தியாவில் முக்கிய ரயில் நிலையமாக விளங்கும் கன்னியாகுமரியில் ரயில் நிலையத்தில் ஏற்கனவே 4 நடைமேடைகள் உள்ள நிலையில் மேலும் 2 நடைமேடைகள் அமைக்கும் பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. பணிகள் முடிவுற்று வரும்போது அதிக ரயில் பயணிகள் பயன்பெறும் வகையில் அமையும் .தென்னக ரயில்வேயில் ஓடும் ரயில்களில் நடைபெறும் குற்றச் சம்பவங்கள் தற்போது 40 சதவீதமாக குறைந்துள்ளது பயணிகளுக்கு போதிய பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்த ரயில்வே போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது இவ்வாறு அவர் கூறினார்.


Conclusion:

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.