ETV Bharat / state

மாயமான மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை - உறவினர்கள் கோரிக்கை

author img

By

Published : Jun 1, 2021, 5:09 PM IST

உறவினர்கள் கோரிக்கை
உறவினர்கள் கோரிக்கை

கன்னியாகுமரி : கேரள கடல் பகுதியில் மாயமான 12 மீனவர்களை மீட்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலைச் சேர்ந்த 12 மீனவர்கள் கடந்த 5ஆம் தேதி கேரள மாநிலம் வேப்பூர் துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அவர்களுடன் வங்கதேச மீனவர்கள் நால்வரும் உடன் சென்றனர். இந்நிலையில் கடந்த 12ஆம் தேதி வரை சக விசைப்படகு மீனவர்களுடன், ஆழ்கடலுக்குச் சென்ற மீனவர்கள் தொடர்பில் இருந்தனர்.

பின்னர் கடந்த 13ஆம் தேதி முதல் ஆழ்கடலுக்குச் சென்ற மீனவர்களிடமிருந்து எந்த தகவலும் இல்லை. டவ்தே புயலின் காரணமாக மீனவர்கள் மாயமாகி இருக்கலாம் என உறவினர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதனால் மாயமான மீனவர்களை உடனடியாக கண்டுபிடித்து தரக்கோரி கடந்த 22ஆம் தேதி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.

இதுகுறித்து மீனவர்களின் உறவினர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், “மீனவர்கள் மாயமாகி 26 நாட்களாகிறது. ஆனால், எந்த ஒரு தகவலும் இதுவரை வரவில்லை. எனவே மாயமான மீனவர்கள் மீட்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க : இந்த 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.