மங்களூரு ஆட்டோ வெடிகுண்டு விவகாரம்: வெளியான புதிய தகவல்!

author img

By

Published : Nov 21, 2022, 10:21 AM IST

Updated : Nov 21, 2022, 1:14 PM IST

மங்களூரு ஆட்டோ வெடி விபத்து

மங்களூரு ஆட்டோ வெடிகுண்டு விவகாரம் தொடர்பாக நாகர்கோவிலில் கைது செய்யப்பட்ட இளைஞரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில் அவர் இச்சம்பவத்தின் தொடர்புடைய நபருக்கு அழைப்பு விடுத்ததாக தெரிகிறது.

கன்னியாகுமரி: கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஆட்டோ வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் போலீசார் மாநில, மாவட்ட எல்லைகளில் சோதனை சாவடிகள் அமைத்து வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கு தொடர்பாக தமிழ்நாட்டில் சிலர் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு உள்ளனர். நாகர்கோவிலில் அசாம் மாநிலத்தை சேர்ந்த அஜீம் ரகுமான் என்பவரை சந்தேகத்தின் பேரில் சிறப்பு புலனாய்வு பிரிவு (SIU) போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அசாம் மாநிலத்தை சேர்ந்த வியாபாரியான அஜீம் ரகுமான் மங்களூரில் ஆட்டோ வெடிப்பில் தொடர்புடைய நபர்களுக்கு உதவியிருக்கலாம் என்ற அடிப்படையில் கோட்டார் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் நேரில் வந்து விசாரணை நடத்தினார்.

நடந்தது என்ன?

ஆசாம் மாநிலத்தை சேர்ந்த அஜீம் ரகுமான் (23) கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் வசித்து கூலி தொழில் செய்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளாக நாகர்கோவிலில் கம்பளம் பகுதியில் பாஸ்ட் புட் கடை ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவரது கடை உரிமையாளரின் மனைவி தனியார் வங்கியில் பணியாற்றி வருகிறார்.

இப்பெண்ணின் செல்போனிற்கு கடந்த செப்டம்பர் மாதம் புதிதாக ஒரு தொலைபேசி எண்ணில் இருந்து அழைப்பு வந்துள்ளது. எதிர் முனையில் பேசிய நபர் இந்தியில் பேசியதாக தெரிகிறது. இதனால் அவர் அந்த எண்ணை துண்டித்துள்ளார்.

மேலும் அந்த தொலைபேசி எண்ணை அஜீம் ரகுமானிடம் கொடுத்து, இந்த எண்ணில் பேசிய நபர் யார், எதற்காக அழைத்துள்ளார் என்பதை கேட்க கூறியுள்ளார். அந்த எண்ணிற்கு அஜீம் ரகுமான் அழைத்த போது எதிர் முனையில் பேசிய நபர் அழைப்பை துண்டித்துள்ளார்.

இந்நிலையில் இம்மாதம் மீண்டும் அஜீம் ரகுமான் மங்களூருவில் ஆட்டோ வெடிகுண்டு வெடித்த சம்பவத்தின் தொடர்புடைய நபருக்கு அழைப்பு விடுத்ததாக தெரிகிறது. இதனால் அஜீம் ரகுமான் மங்களூருவில் குண்டு வெடிப்பு தொடர்புடைய நபர்களுக்கு உதவியிருக்கலாம் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க: பயணிகள் ஓய்வறை மீது சரக்கு ரயில் மோதி விபத்து; 2 பேர் பலி... பலர் காயம்

Last Updated :Nov 21, 2022, 1:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.