ETV Bharat / state

குமரி தொழிலதிபர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

author img

By

Published : Sep 25, 2022, 12:24 PM IST

குமரி தொழிலதிபர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
குமரி தொழிலதிபர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

குமரி மாவட்ட தொழிலதிபர் கல்யாணசுந்தரம் என்பவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி: கடந்த இரண்டு நாட்களாக சென்னை, கோயம்புத்தூர், மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பாஜக, ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி அமைப்பு ஆகியவற்றைச் சார்ந்தவர்களுக்கு தொடர்புடையவர்களின் இடங்களில் தொடர்ந்து பெட்ரோல் குண்டு வீசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு அருகே கருமங்கூடல் பகுதியில் வசித்து வருபவர், தொழிலதிபர் கல்யாண சுந்தரம். இவருடைய வீட்டில் இன்று (செப் 25) அதிகாலை மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்கள், பெட்ரோல் குண்டுகளை வீட்டுக்குள் எறிந்து விட்டுச்சென்றுள்ளனர்.

குமரி தொழிலதிபர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளை மண்டைக்காடு காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சென்னையில் உள்ள தமிழ்நாடு மாநில பாஜக தலைமை அலுவலகத்திற்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அடுத்தடுத்து ஆர்எஸ்எஸ் பிரமுகர்களின் இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.