ETV Bharat / state

இடுகாடாக பயன்படுத்தும் இடத்தில் அப்பார்ட்மென்ட் கட்ட முடிவு - பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

author img

By

Published : Jan 2, 2023, 10:00 PM IST

Etv Bharat
Etv Bharat

கன்னியாகுமரியில் ஆதிதிராவிட மக்கள் இடுகாடாக பயன்படுத்தும் பட்டா நிலத்தை அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அதிகாரிகளை கண்டித்து நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்

கன்னியாகுமரி: தோவாளை ஒன்றியத்திற்கு உட்பட்ட காட்டுப்புதூர் கிராமத்தில் நூற்றுக்கணக்கான ஆதி திராவிட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்கள் அப்பகுதிக்கு அருகே காற்றாடிவிளை பகுதியிலுள்ள நிலத்தை இடுகாடு மற்றும் சுடுகாடாக கடந்த பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகின்றனர்.

இடுகாட்டில் பல கல்லறைகளும் காணப்படும் நிலையில், அவற்றை அகற்றிவிட்டு அரசு அடுக்குமாடி குடியிருப்பு அமைப்பதற்கான முயற்சிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். நீண்ட காலமாக பயன்படுத்தும் தங்கள் இடுகாடு மற்றும் சுடுகாட்டை மற்றொரு பயன்பாட்டிற்கு அனுமதிக்கக் கூடாது என இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

இந்நிலையில், உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனில், அடுத்த கட்டப் போராட்டங்களில் ஈடுபடுவோம் எனவும் மனு அளிக்க வந்த பெண்கள் கூறினர். வார்டு உறுப்பினருக்குக் கூட தெரியாமல் ஊராட்சி நிர்வாகம் அதிகாரிகளின் நடவடிக்கைக்கு துணை போவதாகவும் குற்றஞ்சாட்டி ஆட்சியர் அலுவலகத்தை ஊர் மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: ஈஷாவில் இருந்து வந்த இளம்பெண் மரணம் குறித்து குழு அமைத்து விசாரியுங்கள்; எம்.பி.நடராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.