அனந்தபத்ம நாடாரின் 272ஆவது நினைவு தினம் அனுசரிப்பு - குடும்பத்தினர் மாலை அணிவித்து மரியாதை

author img

By

Published : Sep 13, 2022, 4:35 PM IST

அனந்தபத்ம நாடாரின் 272ஆவது நினைவு தினம் அனுசரிப்பு - குடும்பத்தினர் மாலை அணிவித்து மரியாதை

அனந்த பத்ம நாடாரின் 272ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு குடும்பத்தினர், அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கன்னியாகுமரி: மன்னர் ஆட்சிக்காலத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் படைத்தளபதியாகவும் மன்னர் மார்த்தாண்ட வர்மாவின் ஆலோசகராகவும் இருத்த அனந்த பத்ம நாடாரின் 272ஆவது நினைவு தினம் கன்னியாகுமரி மாவட்டம், கண்ணனூர் ஊராட்சிக்குட்பட்ட தச்சன்விளை பகுதியில் அவரது நினைவிடத்தில் அனுசரிக்கப்பட்டது.

இதில் அனந்த பத்ம நாடாரின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள், காங்கிரஸ் கட்சியினர், நாடார் சங்கத்தினர் கலந்து கொண்டு மாலையணிவித்து மலர்த்தூவி மரியாதை செலுத்தினர். மேலும் அனந்த பத்ம நாடாரின் நினைவிடத்தில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் எனவும்; நினைவிடத்திற்கு வந்து செல்ல சாலைவசதி ஏற்படுத்தித் தரவேண்டுமெனவும் பொதுமக்களும் குடும்பத்தினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

அனந்தபத்ம நாடாரின் 272ஆவது நினைவு தினம் அனுசரிப்பு - குடும்பத்தினர் மாலை அணிவித்து மரியாதை

இதையும் படிங்க:ஓகேனக்கல் ஆற்றில் படகு சவாரிக்கு அனுமதி...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.