ETV Bharat / state

மக்களின் பணத்தை தவறாக பயன்படுத்தினால் யாராயினும் தண்டனை நிச்சயம்! - அமைச்சர் கயல்விழி செல்வராஜ்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 4, 2023, 6:46 PM IST

Updated : Nov 4, 2023, 7:51 PM IST

IT Raids Minister EV Velu
அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பேட்டி

IT Raids Minister EV Velu: 'மக்களின் பணத்தை தவறாக பயன்படுத்தினால் எந்த அரசாக இருப்பினும், தவறு செய்தவர்கள் யாராயினும் தண்டனை அனுபவிக்க வேண்டும்' என அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் ஐடி ரெய்டு குறித்து அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.

மக்களின் பணத்தை தவறாக பயன்படுத்தினால் யாராயினும் தண்டனை நிச்சயம்! - அமைச்சர் கயல்விழி செல்வராஜ்

கன்னியாகுமரி: பால்வளத்துறை அமைச்சர் த.மனோதங்கராஜ் தலைமையில் துறை சார்ந்த அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் இன்று (நவ.4) நடைபெற்றது. பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக கன்னியாகுமரி வந்த அமைச்சர் கயல்விழி செல்வராஜ், இதில் பங்கேற்றதோடு, பயனாளிகளுக்கு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

பின்னர் கூட்டத்தில் பேசிய அமைச்சர் கயல்விழி செல்வராஜ், 'முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுதிகளை மேம்படுத்த இதுவரை ஆண்டிற்கு ரூ.15 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதை மாற்றி, ரூ.50,000 ஆக உயர்த்தினார். மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள விடுதிகளை கல்லூரி மாணவர்கள் விடுதிகளாக தரம் உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இனிவரும் காலங்களில் கட்டப்படும் விடுதிகளில் தனியாக கற்பித்தல் அறையும், மேலும் சிறு சிறு விளையாட்டுகள் விளையாட ஏற்ற வகையில் கட்டடங்களும் கட்டப்படும். இந்த வருடம் 9 கல்லூரி மாணவ மாணவியர்களுக்கான விடுதிகள் ரூ.100 கோடியில் கட்ட அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும். வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு நல்ல திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வன்கொடுமைகள் பாதிக்கப்பட்ட 151 பேருக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டு உள்ளன.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் சார்பில், சுய வேலைவாய்ப்பு திட்டத்தில் ஆடையகம் அமைக்க தாட்கோ மானியத்துடன் (TAHDCO) கூடிய 'வங்கி கடன்' உதவி ஒரு பயனாளிக்கு ரூ.2 லட்சமும், தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் கறவை மாடு வளர்க்க வங்கி கடன் உதவி 7 பயனாளிகளுக்கு ரூ.7 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நல வாரியம் மூலம் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு புதுக்குளம், புளியடி, ஈசாந்திமங்கலம் ஆகிய குடியிருப்பு பகுதிகளில் ரூ.18 லட்சத்து 11 ஆயிரத்து 59 மதிப்பில் குடியிருப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நல வாரியம் மூலம் உறுப்பினர் அடையாள அட்டை, பொன்மனை பேரூராட்சிக்கு உட்பட்ட 16 பயனாளிகளுக்கும் இரணியல் பேரூராட்சிக்கு உட்பட்ட 9 பயனாளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. வன்கொடுமையால் பாதித்த மக்களுக்கு தீருதவித் தொகை வழங்குதல் திட்டத்தின் கீழ் இரண்டு பயனாளிகளுக்கு ரூ.6 லட்சத்து 25 ஆயிரத்து 213 மதிப்பில் தீருதவி மற்றும் குடும்ப ஓய்வூதியமும், தமிழ்நாடு பழங்குடியினர் நல வாரியத்தில் உறுப்பினராக உள்ள நபர்களின் இறப்பிற்கு ஈமச்சடங்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு ரூ.25,000 உதவி தொகையும் வழங்கப்பட்டுள்ளது' என்றார்.

இதைத்தொடர்ந்து, கேலிச்சித்திரம் வரைதல் போட்டியில் மாநில அளவில் 3 இடம் பெற்ற பத்துகாணி அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி மாணவி அகல்யா பிரசாத்துக்கு நினைவு பரிசினையும், தமிழ்நாடு டென்னிஸ் பந்து கிரிக்கெட் சங்கம் சார்பில் மதுரை திருமங்கலத்தில் 17 வயதிற்கு உட்பட்ட மாணவியருக்கான மாநில அளவிலான போட்டியில் முதல் பரிசு பெற்ற குமரி மாவட்ட அணியில் இடம் பெற்ற அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி பேச்சுப்பாறை சார்ந்த மாணவிகளுக்கு சுழல் கோப்பையினையும், பத்து காணி அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளியில் பயின்று 7.5% இட ஒதுக்கீட்டில் கோணம் அரசு பொறியியல் கல்லூரி தேர்வு செய்யப்பட்ட ராகுல் ரிதீஷ் என்ற மாணவனுக்கு நினைவு பரிசினையும் வழங்கினர்.

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கயல்விழி செல்வராஜ், 'கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 166 பேருக்கு தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புக்கான பணி ஆணையை வழங்கியிருக்கிறது. இதேபோன்று, தமிழ்நாடு ஆதிதிராவிடர் நல விடுதிகளில் மாணவ மாணவிகளுக்கு உணவு முறையில் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன' என்றார்.

இதனிடையே அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் வருமான வரித்துறை சோதனை செய்வது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, 'தப்பு செய்தவர்கள், தொடர்பாக சோதனை செய்து அரசு நடவடிக்கை எடுத்துதானே ஆகணும்.. எந்த அரசாக இருந்தாலும், அப்படித்தானே பண்ணுவாங்க.. மக்களுடைய பணத்தை தவறாக பயன்படுத்தினால், யாராக இருந்தாலும் தண்டனை அனுபவித்து தான் தீரவேண்டும்' என பதிலளித்துள்ளார்.

தேர்தல் சமயத்தில் மத்திய அரசு அமலாக்கத்துறையையும், வருமானவரி துறையையும் எதிர்க்கட்சிகள் மீது ஏவுகிறதா? என்ற செய்தியாளர்களில் மற்றொரு கேள்விக்கு, 'தேர்தல் சமயத்தில் அவர்களுக்கு பயம் வந்ததால், தேவையில்லாமல் இப்படி பண்ணுகிறார்கள். எந்த ரெய்டு வந்தாலும் நாங்கள் பயப்பட போவது இல்லை. நாங்கள் உறுதியாகத் தான் இருக்கிறோம். சொந்தக்கட்சி அமைச்சரான எ.வ.வேலு வீட்டில் ரெய்டு நடப்பது குறித்த கேள்விக்கு அமைச்சர் கயல்விழி இத்தகைய பதிலை அளித்ததால் அங்கிருந்த தி.மு.க தலைவர்களும், அதிகாரிகளும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 2வது நாளாக சோதனை! முக்கிய ஆவணங்கள் சிக்கின?

Last Updated :Nov 4, 2023, 7:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.