ETV Bharat / state

மகளுக்கு பொங்கல் சீர் கொடுக்க சென்ற தாய் விபத்தில் பலி.. குமரியில் நிகழந்த சோக சம்பவம்!

author img

By

Published : Jan 11, 2023, 3:57 PM IST

Updated : Jan 11, 2023, 4:19 PM IST

கார் கவிழ்ந்து 2 பெண்கள் பலி
கார் கவிழ்ந்து 2 பெண்கள் பலி

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தலைப் பொங்கல் கொண்டாடும் மகளுக்கு பொங்கல் சீர் வழங்க உறவினர்களுடன் சென்ற கார் விபத்துக்குள்ளானதில் இரு பெண்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொங்கல் சீர் வழங்க சென்ற போது விபத்து : கார் கவிழ்ந்து 2 பெண்கள் பலி

கன்னியாகுமரி: தோவாளை அடுத்த பூதப்பாண்டி பகுதியைச் சேர்ந்தவர் உலகம்மாள். இவரது மகளுக்கு அண்மையில் திருமணமானது. தலைப் பொங்கலை முன்னிட்டு மகள் மற்றும் மருமகனுக்குப் பொங்கல் சீர் வழங்க உறவினர்கள் ஆறு பேருடன் காரில் சென்றுள்ளார். பூதப்பாண்டி அடுத்த தாழக்குடி சாலையில் கார் சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த வயல்வெளியில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் விபத்தில் உலகம்மாள் மற்றும் அவரது உறவினர் உமா என்பவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காரில் இருந்த மற்ற நான்கு பேர் படுகாயங்களுடன் பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் இடத்திற்கு விரைந்த ஆரால்வாய்மொழி போலீசார், விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைப் பொங்கலைக் கொண்டாட உள்ள மகளுக்குப் பொங்கல் சீர் கொடுக்க சென்ற போது, கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் தாய் உள்பட இருவர் உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: ’எங்க தொகுதியில் அப்படி எதுவும் நடக்கவில்லையே’ - சபாநாயகர் கேள்வி

Last Updated :Jan 11, 2023, 4:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.